ஸ்ரீ :
பன்னிரு பாட்டியல்.
பாயிரம். |
|
சொல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி
சிந்தையில் வைத்து முன்னோர் பொருணெறி
கூட்டி யுரைப்பல் பாட்டியன் மரபே.
|
எழுத்தியல். |
1 |
ஏத்திய வோத்திய லெழுத்திய லியம்பிற்
பிறப்பும் வருணமுஞ் சிறப்பாங் கதியு
மிருவகை யுண்டியு மூவகைப் பாலும்
பொருவி றானமுங் கன்னலும் புள்ளு
நயம்பெறு நாளு மியம்புதல் கடனே. |
|
(1) |
1. - பிறப்பு. |
2 |
சிறப்புடை யெழுத்தின் பிறப்பினி துரைப்பின்
முந்நான் குயிரு முதல்வன் படைத்தனன். |
|
(1) |
3 |
நல்லுயிர்ப் பகுதி நான்முகன் படைத்தனன். பொய்கையார். |
|
(2) |
4 |
கண்ணுத றிருமால் கதிர்வேன் முருகன்
விண்ணவர் தலைவன் வெங்கதிர் வெண்மதி
1நிதிக்கோன் கூற்றுவ னெடுநீர் வருண
னென்னுங் கடவுள ரிரண்டிரண் டாக
மன்னிய வொற்று 2வகைவேறு படைத்தனர். |
|
(3) |
5 |
ஒன்பது தேவரு முடம்பு படைத்தனர். பொய்கையார். |
|
(4)
|
2-வருணம். |
6 |
நறுமலர்த் திசைமுக னீச னாரண
னறுமுகன் படைத்தன வந்தணர் சாதி. |
|
(1) |
|
அவை:- அகர முதற் பன்னீருயிரும்,
க, ங, ச, ஞ, ட, ணவும். |
|
[பிரதிபேதம்.] 1நிதிக்கோ னியமன். 2வகைபடைத்தனரே. |