| 		 சுவாமிநாதம் 	            		  		|  1. | 	பூமகளும் பாமகளும் போற்றுமே நாமகளுங்  			கோமகளுங்  கொண்டார்கைக் குஞ்சரமே - மாமகிமைத்  			தொன்னூற்குள் உண்டாய்த் தொகுத்த இலக்கணமாம்  			இந்நூற்குக் காப்பாகு மே.  | 	 	 		கடவுள் வாழ்த்து		      உரை : நிலமகளும் கவிதாசக்தியாம் பாமகளும் போற்றுகின்ற         சரசுவதியும் இலக்குமியும் உள்ளத்தில் கொண்டு நிறைதற்குக் காரணமான      விநாயகப் பெருமானே தொன்னூல் பலவற்றிலிருந்து தொகுத்த இலக்கணமான      சுவாமிநாதம் என்ற இந்நூலுக்குக் காப்பாம்.		      விளக்கம் : பாமகள் - கவிதாசக்தி. போற்றுமெய் என்று         பாடங்கிடைப்பின் நலம். கொண்டு ஆர்கைக் குஞ்சரம் என்க. குஞ்சரமே      காப்பு என்பதாம்.		      குறிப்பு : பி. பொ. சுவடியில் முதலாவது எழுத்தாக்க மரபு என்ற          தலைப்பும் இறுதியில் ‘‘நூல்வழி முற்றும்’’ என்ற தலைப்பும் உள்ளன. அடுத்த      பகுதிக்கும் எழுத்தாக்க   |