சுவாமிநாதம்1
 

சுவாமிநாதம்

1. நூல் வழி

1. பூமகளும் பாமகளும் போற்றுமே நாமகளுங்
கோமகளுங் கொண்டார்கைக் குஞ்சரமே - மாமகிமைத்
தொன்னூற்குள் உண்டாய்த் தொகுத்த இலக்கணமாம்
இந்நூற்குக் காப்பாகு மே.

கடவுள் வாழ்த்து

     உரை : நிலமகளும் கவிதாசக்தியாம் பாமகளும் போற்றுகின்ற
சரசுவதியும் இலக்குமியும் உள்ளத்தில் கொண்டு நிறைதற்குக் காரணமான
விநாயகப் பெருமானே தொன்னூல் பலவற்றிலிருந்து தொகுத்த இலக்கணமான
சுவாமிநாதம் என்ற இந்நூலுக்குக் காப்பாம்.

     விளக்கம் : பாமகள் - கவிதாசக்தி. போற்றுமெய் என்று
பாடங்கிடைப்பின் நலம். கொண்டு ஆர்கைக் குஞ்சரம் என்க. குஞ்சரமே
காப்பு என்பதாம்.

     குறிப்பு : பி. பொ. சுவடியில் முதலாவது எழுத்தாக்க மரபு என்ற
தலைப்பும் இறுதியில் ‘‘நூல்வழி முற்றும்’’ என்ற தலைப்பும் உள்ளன. அடுத்த
பகுதிக்கும் எழுத்தாக்க