சுவாமிநாதம்120சொல்லதிகாரம்
 

6. ஈற்றிசை: ஆசிரியர் வந்தாரே. இங்கு பொருள் இல்லாமல் இறுதியில்
          அசையாக வந்துள்ளதால் ஈற்றசை.

     ‘உம்’ என்ற இடைச்சொல் தரும் எட்டுபொருள்கள்:

1. எதிர்மறை: பிச்சை எடுத்தாலும் கற்க வேண்டும். இங்கு பிச்சை
           எடுக்கக்கூடாது என்ற பொருள் தருவதால் எதிர்மறை.

2. தெரிவு (தெரிநிலை) : நன்றும் அன்று, தீதும் அன்று.

3. ஆக்கம்:  நல்லவனும் ஆயினான், வல்லவனும் ஆயினான் என்று
           ஆக்கவினை வந்திருப்பதால் ஆக்க உம்மை.

4. எச்சம்:   பட்டமும் பெற்றான் என்பது ஒரு துறையில் அதற்குரிய அறிவும்
           பெற்றான் என்று பொருள் தருவதால் எச்ச உம்மை.

5. ஐயம்:    அவன் வெற்றிபெற்றாலும் பெறுவான் - இங்கே துணிந்து
           கூறாமையின் ஐய உம்மை.

6. முற்று: பணம் பத்தும் கொடுத்தான் என்பது அவனிடம் இருந்த
        முழுப்பொருளையும் கொடுத்தான் என்பதால் முற்றும்மை.

7. எண்:  இரவும் பகலும் - இங்கு எண்ணுதற்கண் வருதலால் எண்ணும்மை.

8. சிறப்பு: குறவரும் மருளும் குன்று என்பது மலையில் வாழும் குறவர்களே
         மருட்சி அடையக்கூடிய மலை என்று பொருள்படுவதால் மலையின்
         சிறப்புப்பெறப்பட்டது.

     ‘மற்று’ என்பது தரும்பொருள் இரண்டு:

1. வேறு: இனி மற்று ஒன்று உரை.

2. அசைநிலை: அது மற்று அவலம் கொள்ளாது - இங்கு ‘மற்று’ என்பதற்கு
             பொருள் இல்லை.