|      6. ஈற்றிசை: ஆசிரியர்     வந்தாரே. இங்கு பொருள் இல்லாமல் இறுதியில்            அசையாக வந்துள்ளதால் ஈற்றசை.              ‘உம்’ என்ற இடைச்சொல்     தரும் எட்டுபொருள்கள்:      1. எதிர்மறை: பிச்சை     எடுத்தாலும் கற்க வேண்டும். இங்கு பிச்சை             எடுக்கக்கூடாது என்ற     பொருள் தருவதால் எதிர்மறை.      2. தெரிவு (தெரிநிலை)     : நன்றும் அன்று, தீதும் அன்று.      3. ஆக்கம்:  நல்லவனும்     ஆயினான், வல்லவனும் ஆயினான் என்று             ஆக்கவினை வந்திருப்பதால்     ஆக்க உம்மை.      4. எச்சம்:       பட்டமும் பெற்றான் என்பது ஒரு துறையில் அதற்குரிய அறிவும்             பெற்றான் என்று     பொருள் தருவதால் எச்ச உம்மை.      5. ஐயம்:        அவன் வெற்றிபெற்றாலும் பெறுவான் - இங்கே துணிந்து             கூறாமையின் ஐய உம்மை.    		 		6. முற்று: பணம் பத்தும் கொடுத்தான் என்பது அவனிடம் இருந்த          முழுப்பொருளையும் கொடுத்தான் என்பதால் முற்றும்மை.		 				7. எண்:  இரவும் பகலும் - இங்கு எண்ணுதற்கண் வருதலால் எண்ணும்மை.		 				8. சிறப்பு: குறவரும் மருளும் குன்று என்பது மலையில் வாழும் குறவர்களே           மருட்சி அடையக்கூடிய மலை என்று     பொருள்படுவதால் மலையின்           சிறப்புப்பெறப்பட்டது.		      ‘மற்று’ என்பது தரும்பொருள் இரண்டு:		 1.	வேறு:		இனி மற்று ஒன்று உரை.		 2. அசைநிலை: அது மற்று அவலம் கொள்ளாது - இங்கு 				 ‘மற்று’ என்பதற்கு               பொருள் இல்லை.		  |