சின் : வென்றிசின் யானும். (நற் 61. 10) பிற : ஆயனை அல்ல பிற. பிறக்கு : நசை பிறக்கு ஒழிய. (புறம் 140. 4) அரோ : இருங்குயில் ஆலுமரோ (கலி. 33. 24) போ : பிரியின் வாழாது என்போ. கோள் : இருந்து : எழுந்திருந்தேன். (எழுந்து+இருந்து+ஏன்) இட்டு : நெஞ்சம் பிளந்திட்டு. அன்று : தேவன் அவன் சேவடி சேர்ந்து மன்றே. (சீவக. 1.4) ஆம் : பணியுமாம் என்றும் பெருமை. (குறள் 978) தம் : தாவில் சீர்தம் மடிக்கண். தான் : நீதான். என : இறுவுழி இறுகவென. என்ப : இழிந்தது என்பவே. (சீவக. 39. 4) குரை : பலகுரைத்துன்பங்கள். (குறள். 1045) ஓர் : அஞ்சுவதோரும் மறனே. (குறள் 366) போல் : மங்கலம் என்பதோர் ஊர் உண்டு போலும். யா : யா பன்னிருவர் மாணாக்கர் அகத்தியனாருக்கு. கா : காண்டிகா. (கலி. 99. 9). மாது : விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே. (நற். 178. 10) இகும் : காண்டிகும் அல்லமோ. (ஐங்குறு 121. 1) சின் : தண்ணென்றிசினே. (ஐங்குறு 73. 4) சின் என்பது இரண்டு இடத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்தச் சூத்திரமும் இலக்கண விளக்கம் 274, 272, 273, 276, 277 ஆகிய சூத்திரங்களையொட்டியே அமைக்கப்பட்டுள்ளது. |