4. ஏவல் வினா : சாத்தா உண்டாயோ - (போய்) உண் என்று பொருள்படுவதால் ஏவல்ஆகும். வினா வடிவங்கள் : யா : யாவன், யாவள் முதலிய சொற்களில் பகுதி. ஆர் : அங்கு வந்தது ஆர். யார் : அங்கு வந்தது யார். யாது : இம்மரங்களில் கருங்காலி யாது ஓ : சாத்தா உண்டாயோ ஏ : நீயே கொண்டாய் எவன் : ஏதிலார் சொன்னது எவன் (சிலம்பு 18:15) கொல் : உண்டான் கொல் விடையின் வகை: 1. செவ்வன் இறை : உயிர் எத்தன்மைத்து என்ற கேள்விக்கு உணர்தல் தன்மைத்து என்பது - நேரடியாகப் பதில் சொல்வது. 2. இறை பயப்பது : உண்டாயா என்ற கேள்விக்கு வயிறு வலிக்கிறது என்பது - மறைமுகமாகப் பதில் சொல்வது. இறை பயப்பின் வகை: உண்டாயா என்ற கேள்விக்கு, 1. உற்றல் கூறல் : வயிறு வலித்தது (அதனால் உண்ணவில்லை) 2. உறுவது கூறல் : வயிறு வலிக்கும் ’’ 3. ஏவல் : நீ உண் 4. மறுத்திடல் : உண்ண மாட்டேன் |