ர, ழ ஆகிய இரண்டு மெய்கள் தவிர ஏனைய பதினாறு மெய்கள் உடனிலை மெய்ம்மயக்கமாகவும் வரும். உயிர் மெய்யெழுத்துக்கள் அந்தந்த மெய்யெழுத்துக்கள் போன்று மயங்கும். ய, ர, ழ என்ற மூன்று மெய்யெழுத்துக்களும் க, ச, த, ப, ங, ஞ, ந, ம ஆகியவற்றோடு இரண்டு மெய்யெழுத்துக்களின் இயல்பில் வரும். விளக்கம் : மொழி முதல் எழுத்துக்கள் உயிர்: | அடை, ஆடை, இடை, ஈடு, உடை, ஊடல், எடு, ஏடு, ஐந்து, ஒன்று, ஓடு, ஒளவியம். | | | க: | கடை, காடை, கிளி, கீழ், குலை, கூன், கொடை, கோடு, கைப்பு, கொல், கோல், கௌ. | | | ச: | சடை, சாந்து, சிரி, சீற்றம், சுற்றம், சூடு, செல், சேல், சைவம், சொல், சோலை, சௌமியா | | | த: | தகடு, தான், தின், தீனி, துணி, தூண், தெரு, தேர், தையல், தொடு, தோடு, தௌவியம் | | | ந: | நகரம், நான், நினை, நீடு, நுனி, நூல், நெல், நேர், நைப்பு, நொந்து, நோய், நௌவி. | | | ப: | படை, பாடு, பிடி, பீடை, புல், பூக்கள், பெட்டி, பேன், பையன், பொடி, போடு, பௌவம். | | | ம:. | மலை, மாலை, மிளகு, மீதி, முன், மூன்று, மெல், மேல், மைந்தர், மொட்டு, மோர், மௌவல் | | | வ: | வடை, வாடை, விலை, வீடு, வெல், வேல், வையம், வௌவால். | | | ய: | யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம். | | | ஞ: | ஞமலி, ஞாயிறு, ஞிமிறு, ஞெண்டு, ஞேயம், ஞொள்கு. | | | ங: | அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம். |
|