இரண்டுக்கு மேற்பட்ட சொற்களில் ‘படு’ என்னும் சொல் மறைந்து வந்து அப்பொருளைத் தந்தால் படுதொகை எனப்படும். விளக்கம் : வேற்றுமைத்தொகை : தலைவணங்கினான்-தலையால் வணங் கினான் - மூன்றாம் வேற்றுமை உருபு தொக்கு வந்தது. உவமைத்தொகை : பவளவாய் - பவளம் போன்ற வாய். உம்மைத்தொகை : கபிலபரணர் - கபிலரும் பரணரும் வினைத்தொகை : தின்பண்டம். பண்புத்தொகை : செந்தாமரை அன்மொழித்தொகை : கருங்குழல் - கருமையான குழலை உடையவள் - பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. படுதொகை : பால் கறந்தது - பால் கறக்கப்பட்டது. தொகைகளின் இலக்கணம் சற்றுப் புதுமையாக உள்ளது. 67. | தொக்குழி இன் மயங்கும் இரண்டாதி ஏழ்வரைக்குஞ் சொற்பொருளே தொகைப் பொருள்; மூன்று ஒன்றாமற்றாகா; தக்கிய முன்மொழி பின்மொழி இருமொழி அன்மொழியாய்ச் சாற்றல் தொகைநிலையா (ம்);முற்று, ஈரெச்சம், பெயரின் மிக்க உருபேறல், இடை, உரி, அடுக்காதியவே விரிதொகா நிலைதொடர்தான்; பலதொடர் ஓர் தொடராம்; எக்கும் அடுக்கு அசைக்கு இரண்டு; எண், பொருணிலை மேன் மூன்றாம் இசைநிலை நான்கினும் ஆகும், இரண்டு இடத்தும் என்னே. (14) | தொகையை விரிக்கும் முறையும் சில தொகாநிலைத் தொடரின் வகைகளும் விளக்குகின்றது. |