அண்பல்லையும் அண்ணத்தையும் முறையே நாவிளிம்பைத் தொடவும் தடவவும் முறையே லகர ளகரமும் கீழ் உதடும் மேற்பல்லும் பொருந்திட வகரமும் நுனிநா அண்ணத்தின் நுனியின் மேலே தொட றகர னகரமும் பிறக்கும். ஒவ்வொன்றிற்கும் சிறு வேறுபாடு உண்டு. விளக்கம் : யகரத்தின் பிறப்பு நன்னூலைத் தழுவிக் கூறப்பட்டுள்ளது. நன்னூலாரின் கருத்துப்படி யகரம் முதல் நாமுதல் அண்ணஒலி (Velar Sound) ஆகிறது, இது தவறு என்பது இலக்கண விளக்க உரையில் (12-ஆம் சூத். உரை) எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. நன்னூலைப் பெரிதும் தழுவி எழுதப்பட்டுள்ளது. பா. வி.: ‘தனவாம்’ என்று இருந்தது தநவாம் (1-வது வரி) என்று கொள்ளப்பட்டுள்ளது. 18. |
வன்மை மென்மை யிடைமை யுயிர் ஆய்தம் என்றுஐந் தொடர்க்கீழ் வல்லெழுத்தூருக்குறுகுங்; குறள் உவின் | |
கீழ்யவரிற் |
| |
சொன்மியா வினில் இகரங்குறுகு[ம்]; முதலிடைபின் சொற்பொருள் ஐயே குறுகு[ம்] முன் ஒளவே குறுகும் இன்னலள வலித்திரிபின் இடத்து ஆய்தங்குறுகும்; லளத் திரிந்த னணப் பின் வம்மென் மக்குறுகும்; இவையாறு; உன்னுமலாற் குறிலின்கீழ் உயிர்வலிமேல் அங்காந்துரத் தொலியால் ஒற்றியல் போல் உதித்திடும் ஆய்தமுமே. (6) | சார்பு எழுத்துக்களின் பிறப்புக் கூறத்தொடங்கி அறுவகை குறுக்கமும் ஆய்தமும் பற்றிப் பேசுகின்றது இச்சூத்திரம். உரை : வல்லினம், மெல்லினம், இடையினம், உயிர், ஆய்தம் ஆகிய ஐந்து எழுத்துக்களை இறுதியில் உடைய தொடரின் கீழ்வரும் வல்லினம் ஊர்ந்த உகரம் குறுகிக் குற்றியலுகரமாகும். மியா என்ற சொல்லில் வரும் இகரமும் யகரமுதன்மொழி வரும்போது இகரமாக மாறும் குற்றியலுகரமும் குற்றியலிகரமாகும். மொழிக்கு முன்னும் பின்னும் |