ஆருயிர்க ளனைத்தினையுங் காப்பதற்கே யருள்பூண்டால்
ஓருயிர்க்கே யுடம்பளித்தா லொப்புரவிங் கென்னாகும்;
தாமநறுங் குழல்மழைக்கட் டளிரியலார் தம்முன்னர்க்
காமனையே முனைந்துலைத்தாற் கண்ணோட்டம் யாதாங்கொல்;
இது பேரெண்.
போரரக்க ரோரைவர்க் கறவமிழ்தம் பொழிந்தனையே;
ஆரமிழ்த மணிநாகர் குலமுய்ய வருளினையே;
வார்சிறைப்புள் ளரையர்க்கும் வாய்மைநெறி பகர்ந்தனையே;
பார்மிசை யீரைந்தும் பாவின்றிப் பயிற்றினையே;
இது சிற்றெண்.
அருளாழி பயந்தோய் நீஇ;
அறவாழி பயந்தோய் நீஇ;
மருளாழி துறந்தோய் நீஇ;
மறையாழி புரிந்தோய் நீஇ;
மாதவரின் மாதவ னீஇ;
வானவருள் வானவ னீஇ;
போதனரிற் போதன னீஇ;
புண்ணியருட் புண்ணிய னீஇ;
இவை இடையெண்.
ஆதி நீஇ; அமல னீஇ; அயனு நீஇ; அரியு நீஇ; சோதி நீஇ; நாத னீஇ; துறைவ னீஇ; இறைவ னீஇ; | அருளு நீஇ; பொருளு நீஇ; அறிவ னீஇ; அநக னீஇ; தெருளு நீஇ; திருவு நீஇ; செறிவு நீஇ; செம்ம னீஇ; |
இவை அளவெண்.
எனவாங்கு,
இது தனிச்சொல்.
பவளச் செழுஞ்சுடர் மரகதப் பாசடைப்
பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும்
போதியந் திருநிழற் புனிதநிற் பரவுதும்
மேதகு நந்தி புரிமன்னர் சுந்தரச்
சோழர் வண்மையும் வனப்புந்
திண்மையு முலகிற் சிறந்துவாழ் கெனவே.