150

கொடிபுரையு நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோள்
தொடிநெகிழ்ந்த தோள்கண்டுந் துறவலனே யென்றியால்;

கண்கவரு மணிப்பைம்பூட் கயில்கவைய சிறுபுறத்தோள்
தெண்பனிநீ ருகக்கண்டுந் தெரியலனே யென்றியால்;

நீர்பூத்த் நிரையிதட்க ணின்றொசிந்த புருவத்தோள்
பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே யென்றியால்;

கனைவரல்யாற் றிருகரைபோற் கைநில்லா துண்ணெகிழ்ந்து
நினையுமென் னிலைகண்டு நீங்கலனே யென்றியால்;

வீழ்சுடரி னெய்யேபோல் விழுமநோய் பொறுக்கலாத்
தாழுமென் னிலைகண்டுந் தாங்கலனே யென்றியால்;

கலங்கவிழ்ந்த நாய்கன்போல் களைதுணை பிறிதின்றிப்
புலம்புமென் னிலைகண்டும் போகலனே யென்றியால்;

இவையாறுந் தாழிசை.

அதனால்,

தனிச்சொல்.

அடும்பயி லிறும்பிடை நெடும்பணை மிசைதொறுங்
கொடும்புற மடலிடை யொடுங்கின குருகு;

செறிதரு செருவிடை யெறிதொழி லிளையவர்
நெறிதரு புரவியின் மறிதருந் திமில்;

அரசுடை நிரைபடை விரைசெறி முரசென
நுரைதரு திரையொடு கரைபொருங் கடல்;

அலங்கொளி யவிர்சுட ரிலங்கெழின் மனைதொறுங்
கலந்தெறி காலொடு புலம்பின பொழில்;

இவை நான்கும் அராகம்.  

விடாஅது கழலுமென் வெள்வளையுந் தவிர்ப்பாய்மன்
கெடாஅது பெருகுமென் கேண்மையு நிறுப்பாயோ;

ஒல்லாது கழலுமென் னொளிவளையுந் தவிர்ப்பாய்மன்
நில்லாது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ;

தாங்காது கழலுமென் தகைவளையுந் தவிர்ப்பாய்மன்
நீங்காது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ;

மறவாத வன்பினேன் மனநிற்கு மாறருளாய்
துறவாத தமருடையேன் துயர்தீரு மாறருளாய்;