எழுத்ததிகாரம் | 100 | முத்துவீரியம் |
(இ-ள்.) அல்வழிக்க
ணாய்தமாகத் திரியும்.
(வ-று.) அவ்கடிய = அஃகடிய,
இஃகடிய, உஃகடிய.
(வி-ரை.)
‘வேற்றுமை யல்வழி ஆய்த
மாகும்’ (புள்ளி - 84)
என்பது தொல்காப்பியம்.
(205)
இதுவுமது
365. மெல்லெழுத் தியையின்
மெல்லெழுத் தாகும்.
(இ-ள்.)
மெல்லெழுத்துக்கள் வந்துபுணரின் அவ்வெழுத்தாகத்
திரியும்.
(வ-று.) அவ் + ஞாண் =
அஞ்ஞாண், இஞ்ஞாண், உஞ்ஞாண். அம்மணி, அந்நூல்.
(வி-ரை.)
‘மெல்லெழுத் தியையின்
அவ்வெழுத் தாகும்’ (புள்ளி - 85)
என்பது தொல்காப்பியம்.
(206)
இதுவுமது
366. இடையு முயிரும்
வரினியல் பாகும்.
(இ-ள்.) இடையெழுத்தும்
உயிரெழுத்தும் வந்து புணரின் இயல்பாம் என்க.
(வ-று.) அவ்யாழ், இவ்யாழ்,
உவ்யாழ், அவ்வடை, இவ்வாடை. (207)
தெவ்
367. தெவ்வென் மொழியே
தொழிற்பெய ரற்றே
மவ்வரின் வஃகான் மவ்வு
மாகும்.1
(இ-ள்.)
தெவ்வென்னுஞ்சொல் உகரச்சாரியை பெறும்.
மகரமெய்வரின் வகரமெய்
மகரமெய்யாகும்.
(வ-று.) தெவ்வுக்கடிது,
தெம்மன்னர். (208)
1. நன் - எழுத்து -
மெய்யீற் - 33.
|