எழுத்ததிகாரம்102முத்துவீரியம்

(வ-று.) தாழ் + கோல் = தாழக்கோல். (212)

தமிழ்

372. தமிழு மவற்றோ ரற்றா கும்மே.

(இ-ள்.) தமிழென்னு மொழியும் அக்குச் சாரியை பெறும்.

(வ-று.) தமிழ் + கூற்று = தமிழக்கூற்று.

(வி-ரை.) தமிழ் என்பது அக்குச் சாரியை பெறும் என்பர் தொல்காப்பியர். (தொல்
எழுத் - 387). அகரச் சாரியை பெறும் என்பர் நன்னூலார். (நன் -225). இவர்
தொல்காப்பியத்தைத் தழுவியுள்ளார். (213)

குமிழ்

373. குமிழென் கிளவி யம்மொடு சிவணும்.

(இ-ள்.) குமிழென்னுஞ்சொல் அம்முச் சாரியை பெறும்.

(வ-று) குமிழ் + கோடு = குமிழங்கோடு. (214)

பாழ்

374. பாழென் கிளவி மெல்லெழுத் துறழும்.

(இ-ள்.) பாழென்னுஞ் சொல் மெல்லெழுத் துறழ்ந்து முடியும்.

(வ-று.) பாழ் + கிணறு = பாழ்ங்கிணறு. (215)

ஏழ்

375. ஏழென் கிளவி யன்னொடு சிவணும்.

(இ-ள்.) ஏழென்னும் எண்ணுப்பெயர் அன்சாரியை பெறும்.

(வ-று) ஏழ் + காயம் = ஏழன்காயம். (216)

ஏழின்முன் அளவு, நிறை முதலியன

376. எண்ணிறை யளவும் வரூஉங் காலை
     குறுகலு முகரம் வருதலு முரிய.