எழுத்ததிகாரம் | 105 | முத்துவீரியம் |
(வ-று.) இருளிற்
கொண்டான், இருளத்துக் கொண்டான். (226)
வள்ளும் புள்ளும்
386. வள்ளும் புள்ளு
முகரமொடு சிவணும்.
(இ-ள்.) வள்ளென்னும்
பெயரும், புள்ளென்னும் பெயரும் உகரச்சாரியை
பெறும்.
(வ-று.) வள்ளுக்கடிது,
புள்ளுக்கடிது எனவரும்.
(வி-ரை.)
‘புள்ளும் வள்ளும்
தொழிற்பெய ரியல’ (புள்ளி-108)
என்பது தொல்காப்பியம்.
(227)
குற்றியலுகரம் வரும் இடம்
387. ஈரெழுத் தொருமொழி
யிடைத்தொட ருயிர்த்தொடர்
ஆய்தத் தொடர்மொழி
வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே யுகரங்
குறுகிடன்.
(இ-ள்.) இரண்டெழுத்தொரு
மொழியும், இடைத்தொடர் மொழியும், உயிர்த்தொடர்
மொழியும், ஆய்தத்தொடர்
மொழியும், வன்றொடர் மொழியும், மென்றொடர்
மொழியுமாகிய
ஆறுமே உகரம் தன் மாத்திரையிற்
குறுகுமிடமாம்.
(வி-ரை.)
‘ஈரெழுத் தொருமொழி
உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரம்
குறுகிடன்’ (குற்றிய - 1)
என்பது தொல்காப்பியம்.
(228)
நெடிற்றொடர்க்
குற்றியலுகரம்
1388. அவற்றுள்,
ஈரெழுத் தொருமொழி யிடைத்தொட ராகா.
(இ-ள்.) மேற்கூறிப் போந்தவற்றுள்
இரண்டுமெய்கள் தொடர்ந்த
மொழியிடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆகாவாம்.
1. தொல் - எழுத் - குற்றிய
- 2.
|