எழுத்ததிகாரம்112முத்துவீரியம்

(இ-ள்.) வன்றொடர்மொழிக் குற்றியலுகரத்துக்குமுன் வல்லெழுத்துவரின் மிகும்.

(வ-று.) கொக்குக்கடிது.

(வி-ரை.)

‘வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே’ (குற்றிய - 12)

என்பது தொல்காப்பியம். (250)

மென்றொடர்க் குற்றுகரம் மிகும் இடம்

410. சுட்டுமுத னீடிய மென்றொடர் மொழியும்
    யாகார வினாமுதன் மென்றொடர் மொழியும்
    அவ்விய னிலைபெறு மாயுங் காலே.

(இ-ள்.) சுட்டுமுதல் நீண்ட மென்றொடர் மொழிக் குற்றியலுகரமும், யாகாரவினா
முதலாகிய மென்றொடர்மொழிக் குற்றியலுகரமும் மிக்குமுடியும்.

(வ-று.) ஆங்குக் கொண்டான், ஈங்குக் கொண்டான், ஊங்குக் கொண்டான், யாங்குக்
கொண்டான். (251)

மேலனவற்றுள் ஒன்றற்குச் சிறப்பு விதி

411. அவற்றுள்,
    யாகார வினாவியல் பாதலு முளவே.

(இ-ள்.) முற்கூறியவற்றுள் யாகாரவினா முதலாகிய மென்றொடர்மொழிக் குற்றியலுகர
மொழி யியல்பாதலு முளவாம்.

(வ-று.) யாங்கு கொண்டான்.

(வி-ரை.)

‘யாவினா மொழியே இயல்பு மாகும்’ (குற்றிய - 23)

என்பது தொல்காப்பியம். (252)

மேலனவற்றிற்குச் சிறப்புவிதி

412. அந்நான்கு மொழியுந் தந்நிலை திரியா.

(இ-ள்.) மூன்றுசுட்டும் யாவினா முதலுமாகிய நான்கு பெயரும் மெல்லொற்றாந்
தன்மை திரிந்து வல்லொற்றாகாவாம்.