எழுத்ததிகாரம் | 112 | முத்துவீரியம் |
(இ-ள்.)
வன்றொடர்மொழிக் குற்றியலுகரத்துக்குமுன்
வல்லெழுத்துவரின் மிகும்.
(வ-று.) கொக்குக்கடிது.
(வி-ரை.)
‘வல்லொற்றுத்
தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே’ (குற்றிய - 12)
என்பது தொல்காப்பியம்.
(250)
மென்றொடர்க்
குற்றுகரம் மிகும் இடம்
410. சுட்டுமுத னீடிய மென்றொடர் மொழியும்
யாகார வினாமுதன் மென்றொடர் மொழியும்
அவ்விய னிலைபெறு மாயுங்
காலே.
(இ-ள்.) சுட்டுமுதல் நீண்ட
மென்றொடர் மொழிக் குற்றியலுகரமும், யாகாரவினா
முதலாகிய மென்றொடர்மொழிக் குற்றியலுகரமும்
மிக்குமுடியும்.
(வ-று.) ஆங்குக்
கொண்டான், ஈங்குக் கொண்டான், ஊங்குக்
கொண்டான், யாங்குக்
கொண்டான். (251)
மேலனவற்றுள் ஒன்றற்குச்
சிறப்பு விதி
411. அவற்றுள்,
யாகார வினாவியல் பாதலு
முளவே.
(இ-ள்.) முற்கூறியவற்றுள்
யாகாரவினா முதலாகிய மென்றொடர்மொழிக்
குற்றியலுகர
மொழி யியல்பாதலு முளவாம்.
(வ-று.) யாங்கு கொண்டான்.
(வி-ரை.)
‘யாவினா மொழியே
இயல்பு மாகும்’ (குற்றிய - 23)
என்பது தொல்காப்பியம்.
(252)
மேலனவற்றிற்குச்
சிறப்புவிதி
412. அந்நான்கு மொழியுந்
தந்நிலை திரியா.
(இ-ள்.) மூன்றுசுட்டும்
யாவினா முதலுமாகிய நான்கு பெயரும் மெல்லொற்றாந்
தன்மை திரிந்து வல்லொற்றாகாவாம்.
|