சொல்லதிகாரம்156முத்துவீரியம்

(வ-று.) தோழீஇஇஇஇ. (106)

ஐகாரம் விளியேற்குமாறு

564. ஐகா னிறுதி முறைப்பெயர் மருங்கின்
     ஆவொடு வருதற்கு முரிய வாகும்.

(இ-ள்.) ஐகாரவிறுதி முறைப்பெயர்க்கண் ஆவோடு விளியேற்று வருதற்குரியவாம்.

(வ-று.) அன்னை, அன்னா. உம்மையால், அன்னாய். (107)

அண்மைக்கண் விளியேற்குமாறு

565. அண்மைப் பெயரியல் பாக விளிக்கும்.

(இ-ள்.) சமீபப்பெய ரியல்பாய் விளிக்கும்.

(வ-று.) நம்பி வாழி, வேந்து வாழி, நங்கை வாழி, கோ வாழி. (108)

உயர்திணைக்கண் விளியேற்கும் புள்ளியீறுகள்

566. உயர்திணை மருங்கின் னரலள விறுதி
     விளிக்கு மென்மனார் மெய்யுணர்ந் தோரே.

(இ-ள்.) உயர்திணைக்கண் ன, ர, ல, ள க்களிறுதிப் பெயர்கள் விளியேற்குமென்க.
(109)

ஏனைய ஈறுகள் ஏலாவெனல்

567. ஏனைய புள்ளிகள் விளியே லாவே.

(இ-ள்.) அந்நான்கு மல்லாத மெய்களை யிறுதியாகிய பெயர்கள் விளியேலாவா
மென்க.

(வி-ரை.) விளியேற்பன இவையெனவே,   ஏலாதன பிற என்பது அறியப்படும்.
அங்ஙனமாக  இந்நூற்பா வேண்டாத தொன்றெனின், அன்று, கூறப்பட்ட புள்ளியீறு
பிறவாற்றான் விளிகொள்வனவும் உள என்பது உணர்த்துதற்கும்,கூறப்படாத புள்ளியும்
சிறுபான்மை விளியேற்றலும் இதற்குப் பயனாகக் கொள்க.

எ-டு: பெண்டிர், பெண்டிரோ; தம்முன், தம்முனா; விளங்குமணிக் கொடும்பூணாஅய்
(புறம் - 130) என வருவனவும் இதனாற் கொள்க. (110)