சொல்லதிகாரம் | 156 | முத்துவீரியம் |
(வ-று.) தோழீஇஇஇஇ. (106)
ஐகாரம் விளியேற்குமாறு
564. ஐகா னிறுதி முறைப்பெயர் மருங்கின்
ஆவொடு வருதற்கு முரிய
வாகும்.
(இ-ள்.) ஐகாரவிறுதி
முறைப்பெயர்க்கண் ஆவோடு விளியேற்று
வருதற்குரியவாம்.
(வ-று.) அன்னை, அன்னா.
உம்மையால், அன்னாய். (107)
அண்மைக்கண்
விளியேற்குமாறு
565. அண்மைப் பெயரியல்
பாக விளிக்கும்.
(இ-ள்.) சமீபப்பெய
ரியல்பாய் விளிக்கும்.
(வ-று.) நம்பி வாழி, வேந்து
வாழி, நங்கை வாழி, கோ வாழி. (108)
உயர்திணைக்கண்
விளியேற்கும் புள்ளியீறுகள்
566. உயர்திணை மருங்கின் னரலள விறுதி
விளிக்கு மென்மனார் மெய்யுணர்ந் தோரே.
(இ-ள்.) உயர்திணைக்கண்
ன, ர, ல, ள க்களிறுதிப் பெயர்கள் விளியேற்குமென்க.
(109)
ஏனைய ஈறுகள் ஏலாவெனல்
567. ஏனைய புள்ளிகள்
விளியே லாவே.
(இ-ள்.) அந்நான்கு மல்லாத மெய்களை
யிறுதியாகிய பெயர்கள் விளியேலாவா
மென்க.
(வி-ரை.) விளியேற்பன
இவையெனவே, ஏலாதன பிற என்பது அறியப்படும்.
அங்ஙனமாக இந்நூற்பா வேண்டாத தொன்றெனின், அன்று,
கூறப்பட்ட புள்ளியீறு
பிறவாற்றான்
விளிகொள்வனவும் உள என்பது உணர்த்துதற்கும்,கூறப்படாத புள்ளியும்
சிறுபான்மை
விளியேற்றலும் இதற்குப் பயனாகக் கொள்க.
எ-டு: பெண்டிர், பெண்டிரோ; தம்முன்,
தம்முனா; விளங்குமணிக் கொடும்பூணாஅய்
(புறம் - 130) என வருவனவும் இதனாற் கொள்க. (110)
|