சொல்லதிகாரம் | 166 | முத்துவீரியம் |
(இ-ள்.) அன், ஆன், அள்,
ஆள் என்னும் ஈற்றவாகிய நான்கு சொல்லும் உயர்திணை
ஒருமையுணர்த்தும் படர்க்கைச்
சொல்லாம்.
(வ-று.) உண்டனன், உண்டான்,
உண்டனள், உண்டாள் எனவரும். (11)
உயர்திணைப்
படர்க்கைப் பன்மை வினைமுற்று
605. அர்ஆர் பகர விறுதிக்
கிளவி
அத்திணை மருங்கிற்
பல்லோர் படர்க்கை.
(இ-ள்.) அர், ஆர், ப
என்னும் ஈற்றையுடையவாய் வரும் மூன்று சொல்லும்
உயர்திணைக்கட் பல்லோரை யுணர்த்தும்
படர்க்கைச் சொல்லாம்.
(வ-று.) உண்டனர், உண்பார்,
உண்ப. (12)
இதுவுமது
606. மாரைக் கிளவியு
மவற்றோ ரற்றே.
(இ-ள்.) முன்னையனவேயன்றி
மாரீற்றுமொழியும் பல்லோர் படர்க்கையை
யுணர்த்தும்.
(வ-று.) கொண்மார்
வந்தார். (13)
யார்
607. ஆண்பெண் பலரொடும்
யாரெனு மொழிவரும்.
(இ-ள்.) யாரென்னும்
வினாப்பொருளை யுணர்த்துஞ் சொல் உயர்திணைக்கண்
ஆண்பெண் பலரொடும் வரும்.
(வ-று.) அவன்யார்,
அவள்யார், அவர்யார் எனவரும். (14)
ன, ள, ர ஈற்றயல் ஆ, ஓ
ஆதல்
608. ஆன்ஆள் ஆர்முத லாவோ
வாகும்.
(இ-ள்.) பால்விளக்க வரும்
இயல்பையுடைய ஆன், ஆள், ஆர் முதலாகாரம்
ஓகாரமாமென்க.
(வ-று.) ‘வினவி
நிற்றந்தோனே’ (அகம்-48), ‘நல்லைமன்னென
நகூப்பெயர்ந்
தோளே’ (அகம் - 248) ‘‘பாசிலை
வாடாவள்ளியங் காடிறந் தோரே’’ (குறுந் - 214). (15)
|