சொல்லதிகாரம்188முத்துவீரியம்

(இ-ள்.) பிணையும், பேணும் பெட்பின் பொருளாகிய புறந்தருதல் என்னுங் குறிப்பைத்
தெரிவிக்கும்.

(வ-று.) ‘அரும்பிணை யகற்றி’ ‘அமரர்ப்பேணியும்’ (புறம்-99) (42)

தா

685. தாவே வலியும் வருத்த முந்தரும்.

(இ-ள்.) தாவென்பது - வலியும், வருத்தமுமாகிய குறிப்பை யுணர்த்தும்.

(வ-று.) ‘தாவி னன்பொன் றைஇய பாவை’ (அகம்-212). ‘கருங்கட்டாக்கலை’
(குறுந்-69). (43)

அரவப் பொருளன

686. 1 கம்பலை சும்மை கலியே யழுங்க
       லென்றிவை நான்கு மரவப் பொருள.

(இ-ள்.) கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் நான்கு மரவமாகிய
இசைப்பொருண்மையை யுணர்த்தும்.

(வ-று.) ‘கம்பலைமூதூர்’ (புறம்-54) ஒருபெருஞ் சும்மையொடு. ‘கலிகொளாயம்’
(அகம்-11) ‘அழுங்கலூரே’ (நற்-203) எனவரும். (44)

வெகுளிப் பொருளன

687. 2 கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள.

(இ-ள்.) கறுப்பும், சிவப்பும், வெகுளியாகிய குறிப்பையுணர்த்தும்.

(வ-று.) ‘நிற்கறுப்பதோ ரங்கடிமுனையள்’ ‘நீ சிவந்திறுத்த நீரழி பாக்கம்’ (பதிற்-13).
(45)

வழுத்தற் பொருளன

688. பரவும் பழிச்சும் வழுத்தன் மேன.

(இ-ள்.) பரவும், பழிச்சும், வழுத்தலாகிய குறிப்பை யுணர்த்தும்.

1. தொல் - சொல் - உரி. 53.

2. தொல் - சொல் - உரி. 76.