| எழுத்ததிகாரம் | 19 | முத்துவீரியம் |
(இ-ள்.) ரகர ழகரங்கள்
மேல்வாயை நாநுனி தடவப் பிறக்கும். (53)
ல
54. லகரமணப் பல்லடி
நாவிளிம் புறவரும்.
(இ-ள்.) லகரம் மேல்வாய்ப் பல்லடியை
நாவோரம் தடித்துப் பொருந்தப் பிறக்கும்.
(54)
ள
55. ளகரமேல் வாயை நாநுனி தடவப்
பிறக்கு மென்மனார்
பெரிதுணர்ந் தோரே.
(இ-ள்.) ளகரம் மேல்வாயை
நாவோரம் தடித்துத் தடவப் பிறக்கும். (55)
வ
56. 1மேற்பல் லிதழுற
மேவிடும் வவ்வே.
(இ-ள்.) வகரம்
மேல்வாய்ப் பல்லைக் கீழுதடு பொருந்தப்
பிறக்கும். (56)
ற, ன
57. அண்ண நுனிநா வழுத்த
றனவரும்.
(இ-ள்.) றகர னகரங்கள்
மேல்வாயை நாநுனி மிக வழுத்தப் பிறக்கும். (57)
ஆய்தத்திற்கு இடமும்
பிறப்பும்
58. உந்தி தனிநிலை
யுற்றங் காந்தெழும்.
(இ-ள்.) ஆய்தத்துக்கு
உந்தி இடமாம், வாயைத் திறத்தலாற் பிறக்கும்.
(வி-ரை.) ஆய்தம்
தலையினிடமாகப் பிறக்கும் என்பர் இளம்பூரணம் நன்னூலாரும்
நச்சினார்க்கினியர்
நெஞ்சினிடமாகப் பிறக்கும் என்பர். இவர்
உந்தியை இடமாகப் பிறக்கும்
என்று கூறுவது
புதியதாம். (58)
1. நன். எழுத்து. 30.
|