| சொல்லதிகாரம் | 197 | முத்துவீரியம் |  
  
அவை செய்யுட்கண் வரும்
மரபு 
714. முற்படக் கூறல்
யாப்பினு ளுரித்தே. 
(இ-ள்.) இயற்பெயரும்,
சுட்டுப்பெயரும், வினைகோடற் கொருங்கு நிகழுங்காலம், 
சுட்டுப்பெயரை முற்படக் கூறல் செய்யுட்கணுரித்தாம். 
(வ-று.) 
‘‘அவனணங்கு
நோய்செய்தான் ஆயிழாய் வேலன் 
விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி-முகனமர்ந்து 
அன்னை அலர்கடப்பந் தாரணியில் என்னைகொல் 
பின்னை அதன்கண் விளைவு’’ 
(வி-ரை.) இதன்கண்
சேந்தன் என்ற இயற்பெயர் பின்னரும், அவன்
என்னும் 
சுட்டுப்பெயர் முன்னரும் வந்தமை காண்க. (72) 
சுட்டுமுதலாகிய காரணப்
பெயர் 
715. சுட்டுமுத லாகிய காரணப் பெயரும் 
     முற்படக் கிளத்தன் முறையன் றாகும். 
(இ-ள்.) சுட்டுமுதலாகிய
காரணப்பெயரும், சுட்டுப் பெயரைப் போலப் 
பின்னுரைக்கப்படும். 
(வ-று.) சாத்தன் கையெழுதுமாறு வல்லன்
அதனால் தந்தை யுவக்கும்; சாத்தி 
சாந்தரைக்குமாறு வல்லள் அதனாற் கொண்டானுவக்கும். (73) 
இயற்பெயரும்
சிறப்புப்பெயரும் 
716. வினைக்கொருங்
கியலும் விழுமிய பொருட்கும் 
     இயற்பெயர் முற்பட வியம்பினாம் வழுவே. 
(இ-ள்.) வினைகோடற்கு
ஒருங்கியலும்வழி சிறப்பானாகிய பெயர்க்கும் இயற்பெயரை 
முற்படக்கூறல் வழுவாம். 
(வ-று.) ஏனாதி நல்லுதடன்; காவிதி
கண்ணந்தை; முனிவன் அகத்தியன்; 
தெய்வப்புலவன் திருவள்ளுவன் எனவரும். (74) 
ஒரு பொருள் குறித்த பல
பெயர் 
717. ஒருபொருள் குறித்த
பலபெயர்க் கிளவி 
     ஒருவினை முடிபறை யாதப் பெயர்தொறும் 
     வேறொரு வினைதந் துரைப்பது விதியே. 
			
				
				 |