சொல்லதிகாரம் | 197 | முத்துவீரியம் |
அவை செய்யுட்கண் வரும்
மரபு
714. முற்படக் கூறல்
யாப்பினு ளுரித்தே.
(இ-ள்.) இயற்பெயரும்,
சுட்டுப்பெயரும், வினைகோடற் கொருங்கு நிகழுங்காலம்,
சுட்டுப்பெயரை முற்படக் கூறல் செய்யுட்கணுரித்தாம்.
(வ-று.)
‘‘அவனணங்கு
நோய்செய்தான் ஆயிழாய் வேலன்
விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி-முகனமர்ந்து
அன்னை அலர்கடப்பந் தாரணியில் என்னைகொல்
பின்னை அதன்கண் விளைவு’’
(வி-ரை.) இதன்கண்
சேந்தன் என்ற இயற்பெயர் பின்னரும், அவன்
என்னும்
சுட்டுப்பெயர் முன்னரும் வந்தமை காண்க. (72)
சுட்டுமுதலாகிய காரணப்
பெயர்
715. சுட்டுமுத லாகிய காரணப் பெயரும்
முற்படக் கிளத்தன் முறையன் றாகும்.
(இ-ள்.) சுட்டுமுதலாகிய
காரணப்பெயரும், சுட்டுப் பெயரைப் போலப்
பின்னுரைக்கப்படும்.
(வ-று.) சாத்தன் கையெழுதுமாறு வல்லன்
அதனால் தந்தை யுவக்கும்; சாத்தி
சாந்தரைக்குமாறு வல்லள் அதனாற் கொண்டானுவக்கும். (73)
இயற்பெயரும்
சிறப்புப்பெயரும்
716. வினைக்கொருங்
கியலும் விழுமிய பொருட்கும்
இயற்பெயர் முற்பட வியம்பினாம் வழுவே.
(இ-ள்.) வினைகோடற்கு
ஒருங்கியலும்வழி சிறப்பானாகிய பெயர்க்கும் இயற்பெயரை
முற்படக்கூறல் வழுவாம்.
(வ-று.) ஏனாதி நல்லுதடன்; காவிதி
கண்ணந்தை; முனிவன் அகத்தியன்;
தெய்வப்புலவன் திருவள்ளுவன் எனவரும். (74)
ஒரு பொருள் குறித்த பல
பெயர்
717. ஒருபொருள் குறித்த
பலபெயர்க் கிளவி
ஒருவினை முடிபறை யாதப் பெயர்தொறும்
வேறொரு வினைதந் துரைப்பது விதியே.
|