எழுத்ததிகாரம்21முத்துவீரியம்

இதுவுமது

62. 1அ, ஆ, எ, ஒ, வ்வோ டாகு ஞம்முதல்.

(இ-ள்.) ஞகரமெய் அ, ஆ, எ, ஒ ஆகிய நான்குயிரோடு மொழிக்கு முதலாகும்.

(வ-று.) ஞமலி - ஞாயிறு, ஞெகிழி - ஞொள்கிற்று, எனவரும்.

(வி-ரை.) தொல்காப்பியர் ஞகரம் ஆ, எ, ஒ ஆகிய மூன்றுயிருடன் மட்டுமே வரும்
என்பர். நன்னூலார் அகரத்தோடு வருதலையும் ஏற்றனர். இவ்வாசிரியரும் இவரைத்
தழுவினர். ஞெகிழி - கொள்ளி. ஞொள்கிற்று - இளைத்தது. (62)

இதுவுமது

63. அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள வோடு
    யகர மொழிமுத லாகு மென்ப.

(இ-ள்.) அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள ஆகிய வாறுயிரோடும் யகர மெய்மொழிக்கு
முதலாகும்.

(வ-று.) யவனர் - யாகம், யுகம் - யூகம், யோகம் - யௌவனம்.

(வி-ரை.) ‘அ ஆ உ ஊ ஒ ஒள யம் முதல்’ (எழுத்-46) என்பது நன்னூல். இதனைத்
தழுவியே இவ்வாசிரியரும் கூறியுள்ளார். தொல்காப்பியர் யகரம் ஆ என்பதோடுமட்டுமே
வரும் என்பர். யகரம் ஆகாரத்தோடு கூடிவருவனவே தமிழ்ச்சொல்லாக வரும். ஏனைய
ஆரியச் சிதைவாகும். ஆதலின் தொல்காப்பியர் கூறுவதே பொருத்தம் உடையதாகும். (63)

இதுவுமது

64. உ. ஊ, ஒ, ஓ வலவொடு வவ்வரும்.

(இ-ள்.) உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்குயிருமல்லாத வெட்டுயிரோடும், வகரமொழிக்கு
முதலாகும்.

(வ-று.) வசை - வாகை, வினை - வீமன், வெளி - வேதம், வையகம் - வௌவால்
எனவரும். (64)

வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

65. வேற்றுநிலை க, ச, த, ப, வல்லன மெய்பதி
    னான்கு மென்மனார் நற்றமிழ் வல்லோர்.

1. நன். எழுத்து - 50.