யாப்பதிகாரம் | 427 | முத்துவீரியம் |
(வ-று.)
வந்துழிக் காண்க. (10)
வெண்பாவினிறுதிச்சீர்
அலகிடுமாறு
911. நேர்நா ணிரைமலர் தேமாக் காசு
புளிமாப் பிறப்பெனப் புகலப்
படுமே.
என்பது, நேரசையிறின்
நாளெனவும், நிரையசையிறின் மலரெனவும், தேமாவிறின்
காசெனவும், புளிமாவிறின்
பிறப்பெனவும் பெயர்பெறும்.
(வ-று.)
பாலொடு தேன்கலந் தற்றே
பனிமொழி
வாலெயி றூறிய நீர். (குறள்-1121)
நாள்.
கற்றதனா லாய பயனென்கொல்
வாலறிவன்
நற்றா டொழாஅ ரெனின்.
(குறள்-2)
மலர்.
தேன்றிற் புகழொடு தோன்றுக
வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று.
(குறள்-236)
காசு.
அகர முதல வெழுத்தெல்லா
மாதி
பகவன் முதற்றே யுலகு. (குறள்-1)
பிறப்பு. (11)
வெண்பாவிற்குரிய ஓசை
912. செப்ப லோசையிற்
சிறக்கும்வெண் பாவே.
என்பது, வெண்பாச்
செப்பலோசையைப் பெறும். (12)
செப்பலோசையின் வகை
913. அதுதான்,
ஏந்திசை தூங்கிசை யொழுகிசை யெனவொரு
மூன்று வகைப்படு மொழியுங் காலே.
|