அணியதிகாரம்519முத்துவீரியம்

(வ-று.)

வேலுங் கருவிளையு மென்மானுங் காவியுஞ்
சேலும் வடுவகிருஞ் செஞ்சரமும்-போலுமால்
தேமருவி யுண்டு சிறைவண் டறைகூந்தற்
காமருவு பூங்கோதை கண். (தண்டி-மேற்) (17)

விகாரவுவமை

1171. விகாரமோ ருவமையை விகாரப் படுத்திப்
     பொருளை யுவமித்துப் போதர லாகும்.

என்பது, ஓருவமையை விகாரப்படுத்திப் பொருளை யுவமித்தொழுகல்
விகாரவுவமை.

(வ-று.)

சீதமதியி னொளியுஞ் செழுங் கமலப்
போதின் புதுமலர்ச்சி யுங்கொண்டு-வேதாத்தன்
கைம்மலரா னன்றிக் கருத்தால் வகுத்தமைத்தான்
மொய்ம்மலர்ப்பூங் கோதை முகம். (தண்டி-மேற்) (18)

மோகவுவமை

1172. விழுமிய வொருபொருண் மேலெழும் வேட்கை
      வருமன மயக்கம் புலப்பட வகுத்து
      மொழிவது மோக வுவமை யாகும்.

என்பது, ஒருபொருண்மேற் றோன்றிய இச்சையினாலே வரப்பட்ட மன மயக்கம்
வெளிப்பட வகுத்துக் கூறல் மோகவுவமை.

(வ-று.)

கயல்போலு மென்றுநின் கண்பழிப்பல் கண்ணின்
செயல்போற் பிறழுந் திறத்தாற்-கயல்புகழ்வல்
ஆரத்தா னோம்மருங்கு லந்தரள வாண்முறுவல்
ஈரத்தா லுள்வெதும்பும் யான். (தண்டி-மேற்) (19)

கூடாவுவமை

1173. கூடா ததனைக் கூடுவ தாகக்
     கொண்டத னொன்றற் குவமை யாக்கி
     உரைப்பது கூடா வுவமை யாகும்.