அணியதிகாரம்521முத்துவீரியம்

என்பது, ஆகியவென்னு மாட்டேற்றுச்சொல்லை மறைத்துக் கூறல் தொகையுருவகம்.

(வ-று.)

அங்கை மலரு மடித்தளிருங் கண்வண்டுங்
கொங்கை முகிழுஞ் குழற்காருந்-தங்கியதோர்
மாதர்க் கொடியுளதா னண்பா வதற்கெழுந்த
காதற் குளதோ கரை. (23)

விரி யுருவகம்

1177. விரிந்து நிற்பது விரியெனப் படுமே.

என்பது, ஆகியவென்னு மாட்டேற்றுச் சொல் வெளிப்பட்டு நிற்றல் விரி யுருவகம்.

(வ-று.)

கொங்கை முகையாக மென்மருங்குல் கொம்பாக
அங்கை மலரா வடித்தளிராத்-திங்கள்
அளிநின்ற மூர லணங்கா மெனக்கு
வெளிநின்ற வேனிற் றிரு. (24)

தொகைவிரி யுருவகம்

1178. தொக்கும் விரிந்து நிற்பது தொகைவிரி.

என்பது, ஆகியவென்னு மாட்டேற்றுச் சொல் மறைந்தும் வெளிப்பட்டும் நிற்றல்
தொகைவிரி யுருவகம்.

(வ-று.)

வையந் தகழியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச்-செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டுவன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று. (25)

இயை புருவகம்

1179. உருவகம் பலபொரு ளையுமுஞற் றுங்கால்
     தம்மு ளியைபுடைத் தாக வுருவகஞ்
     செய்வ தியைபெனச் செப்பினர் புலவர்.