எழுத்ததிகாரம் | 60 | முத்துவீரியம் |
(வ-று.) காலேகாணி
தொடியேகஃசு, கலனேதூணி எனவரும். (43)
எண், நிறை அளவின்கண்
அரைவருதல்
203. அரைவரின் ஏயகன்
றோடு மற்றே.
(இ-ள்.) அரையென்னுஞ்
சொல்வரின் ஏகாரச்சாரியை பெறாவாம்.
(வ-று.) காலரை, களஞ்சரை,
உழக்கரை.
(வி-ரை.) அற்றே: அசைநிலை.
(44)
அவற்றின்முன் குறை என்பது
வருதல்
204. குறைவரின் வேற்றுமை
கொளின்மிகு மென்ப.
(இ-ள்.) வேற்றுமைக்கண்
குறையென்னும் சொல்வரின் மிக்குமுடியும்.
(வ-று.) காணிக்குறை,
தொடிக்குறை, உரிக்குறை. (45)
குற்றியலுகரம் இன்
சாரியை பெறுதல்
205. குற்றிய லுகரக்
கின்னே சாரியை.1
(இ-ள்.) குற்றியலுகரம்
இன்சாரியை பெறுமென்க.
(வ-று.) நாகின்வளர்ச்சி,
எஃகின்கால், வரகின்கதிர், கொக்கின் கால், குரங்கின்கண்,
தெள்கின்கால், ஒன்றின்குறை, களஞ்சின்குறை, ஆழாக்கின்குறை. (46)
கலத்தின்முன் அத்து
வருதல்
206. கலமென் னளவே
யத்தொடு சிவணும்.
(இ-ள்.) கலமென்னு
மளவுப்பெயர் அத்துச்சாரியை பெறும்.
(வ-று.) கலம் + குறை =
கலத்துக்குறை. (47)
பனையும் காவும் இன்னொடு
வருதல்
207. பனையுங் காவு
மின்னொடு சிவணும்.
1. தொல் - எழுத்து.
தொகைமரபு - 25.
|