எழுத்ததிகாரம் | 64 | முத்துவீரியம் |
(இ-ள்.) மகரமெய்
இறுதியாகிய சொற்கள் அத்துச்சாரியை பெறுமென்க.
(வ-று.) மரத்தை. (60)
எய்தியதன்மேற் சிறப்பு
விதி
220. இன்னொடு வருதலு
மதனியல் பாகும்.
(இ-ள்.)
மகரவீற்றுச்சொற்க ளத்துச்சாரியையே யன்றி
இன்சாரியையும் பெறும்.
(வ-று.) உருமினை. (61)
நும்மென்னிறுதி
இயல்பாகும்
221. நும்மத் தின்னையு
நோக்கா தியலும்.
(இ-ள்.) நும்மென்னு
மகரவீற்றுச்சொல் மேற்கூறிய அத்துச் சாரியையும்
இன்சாரியையும் பெறாதியல்பா மென்க.
(வ-று.) நும்மை.
(வி-ரை.)
‘‘நும்மென் இறுதி
இயற்கை யாகும்’’ (தொகை - 15)
என்பது தொல்காப்பியம்.
(62)
நெடுமுதல் குறுகும்
சொற்கள்
222. தாமு நாமு நெடுமுதல்
குறுகும்.
(இ-ள்.) தாம் நாம் என்னுந் தன்மைப்
பன்மைப் பெயர், அத்தும் இன்னும் பெறாது
நெடுமுதல் குறுகுமெனவறிக.
(வ-று.) தம்மை, நம்மை. (63)
யாம் எம்மெனத் திரியும்
223. யாமெம் மாகுமா ராயுங்
காலே.
(இ-ள்.) யாமென்னும் பெயர்
எம்மாகும் ஆராயுமிடத்து.
(வ-று.) எம்மை. (64)
|