| எழுத்ததிகாரம் | 71 | முத்துவீரியம் |  
  
(இ-ள்.) பலசிலவென்னும் பலவின்பெயர்
தமக்குமுன்னர்த் தாம்வரின் இயல்பாதலும், 
மிகுதலும், அகரங்கெட லகரமெய் றகரமெய்யாதலும், பிறசொற்கள்வரின்
அகரம் 
விகற்பமாதலுமுளவாம். 
(வ-று.) பலபல - பலப்பல,
சிலசில - சிலச்சில, பற்பல - சிற்சில, பலமணி - 
பன்மணி, சிலமணி - சின்மணி. (85) 
எய்திய தன்மேற் சிறப்பு
விதி 
245. அவைதாம் பாவினுள்
நீட்டமும் வரையார். 
(இ-ள்.) அப்பலவுஞ் சிலவுஞ்
செய்யுளினீட்டமு நீக்காது கொள்வார் புலவர். 
(வ-று.) பலாம், சிலாம் 
(வி-ரை.) 
‘‘பலவற் றிறுதி
நீடுமொழி யுளவே 
செய்யுள் கண்ணிய
தொடர்மொழி யான’’ (உயிர்ம - 11) 
என்ற தொல்காப்பிய விதியைத்
தழுவியது இந் நூற்பா. நீட்சியோடு அகரப் பேறும் 
கொள்க எனக் கூறி பலாஅம் சிலாஅம் என
எடுத்துக் காட்டுவர் இளம்பூரணர். (86) 
மரப்பெயர் 
246. வலிவரின் மரப்பெயர்
மெலிமிகு மென்ப. 
(இ-ள்.) மரப்பெயருக்கு
முன்னர்க் க, ச, த, ப க்கள் வரின் தமக்கினமாகிய 
மெல்லெழுத்து மிக்குமுடியும். 
(வ-று.) விளங்கோடு. (87) 
மக என்னும் பெயர் 
247. இன்சாரி யைமக வேற்கு
மென்ப. 
(இ-ள்.) மகவென்னுஞ்சொல்
இன்சாரியை பெறும். 
(வ-று.) மகவின்கை. (88) 
2. ஆகார ஈறு 
உம்மை தொக்க
இருபெயர்த் தொகைச்சொல் 
248. எச்ச வும்மை
யிருபெயர்த் தொகைச்சொற் 
     ககரச் சாரியை யுரித்தா
கும்மே. 
			
				
				 |