எழுத்ததிகாரம்71முத்துவீரியம்

(இ-ள்.) பலசிலவென்னும் பலவின்பெயர் தமக்குமுன்னர்த் தாம்வரின் இயல்பாதலும்,
மிகுதலும், அகரங்கெட லகரமெய் றகரமெய்யாதலும், பிறசொற்கள்வரின் அகரம்
விகற்பமாதலுமுளவாம்.

(வ-று.) பலபல - பலப்பல, சிலசில - சிலச்சில, பற்பல - சிற்சில, பலமணி -
பன்மணி, சிலமணி - சின்மணி. (85)

எய்திய தன்மேற் சிறப்பு விதி

245. அவைதாம் பாவினுள் நீட்டமும் வரையார்.

(இ-ள்.) அப்பலவுஞ் சிலவுஞ் செய்யுளினீட்டமு நீக்காது கொள்வார் புலவர்.

(வ-று.) பலாம், சிலாம்

(வி-ரை.)

‘‘பலவற் றிறுதி நீடுமொழி யுளவே
செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான’’ (உயிர்ம - 11)

என்ற தொல்காப்பிய விதியைத் தழுவியது இந் நூற்பா. நீட்சியோடு அகரப் பேறும்
கொள்க எனக் கூறி பலாஅம் சிலாஅம் என எடுத்துக் காட்டுவர் இளம்பூரணர். (86)

மரப்பெயர்

246. வலிவரின் மரப்பெயர் மெலிமிகு மென்ப.

(இ-ள்.) மரப்பெயருக்கு முன்னர்க் க, ச, த, ப க்கள் வரின் தமக்கினமாகிய
மெல்லெழுத்து மிக்குமுடியும்.

(வ-று.) விளங்கோடு. (87)

மக என்னும் பெயர்

247. இன்சாரி யைமக வேற்கு மென்ப.

(இ-ள்.) மகவென்னுஞ்சொல் இன்சாரியை பெறும்.

(வ-று.) மகவின்கை. (88)

2. ஆகார ஈறு

உம்மை தொக்க இருபெயர்த் தொகைச்சொல்

248. எச்ச வும்மை யிருபெயர்த் தொகைச்சொற்
     ககரச் சாரியை யுரித்தா கும்மே.