எழுத்ததிகாரம்74முத்துவீரியம்

மேலதற்கோர் சிறப்பு விதி

255. வல்லெழுத்து மிகினு மான மில்லை.1

(இ-ள்.) மேற்கூறிப்போந்த மரப்பெயர்கள் வல்லெழுத்து மிக்குமுடியினும்
குற்றமில்லையா மென்க.

(வ-று.) யா அக்கோடு, பிடா அக்கோடு, தளா அக்கோடு (96)

ஆ, மா, என்னும் பெயர்கள்

256. ஆமா னகரமெய் யடையப் பெறுமே.

(இ-ள்.) ஆவென்னும் பெயரும், மாவென்னும் பெயரும், னகரச்சாரியை பெறும்.

(வ-று.) ஆன் கோடு, மான் கோடு. (97)

ஆ என்பதற்குச் சிறப்பு விதி

257. 2ஆனொற் றகரமொடு நிலையிட னுடைய.

(இ-ள்.) ஆமுன்னின்ற னகரமெய், அகரச்சாரியையோடு நிலைபெறுமிடனுடையனவாம்.

(வ-று.) ஆனநெய் தெளித்து . (98)

ஆமுன் பகர ஈ

258. ஆமுன் பகரவீ யனைத்தும்வரக் குறுகும்.

(இ-ள்.) ஆவென்னும் மொழிக்கு முன்னின்ற ஈகார பகரம், நாற்கணமும் வரின் ஈ,
இய்யாம்.

(வ-று.) ஆப்பீகுறிது = ஆப்பிகுறிது; ஆப்பிநன்மை, ஆப்பிவலிது, ஆப்பியரிது.

(வி-ரை.)

‘‘ஆன்முன் வரூஉம் ஈகார பகரம்
தான்மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே’’ (உயிர்ம - 31)

என்னும் தொல்காப்பிய விதியைத் தழுவியது இந்நூற்பா. (99)

1. தொல் எழுத்து உயிரீற் 28.

2. ,, ,, ,, 30.