எழுத்ததிகாரம் | 78 | முத்துவீரியம் |
(இ-ள்.) மீயென்னு
மேலிடப்பெய ரியல்பாதலு மொருகால் மெல்லெழுத்து
மிகுதலும்
ஒருகால் வல்லெழுத்து மிகுதலுமாம் என்று
சொல்லுவ ரறிவுடையோர்.
(வ-று.) மீகண், மீந்தோல்,
மீத்தோல் எனவரும். (112)
5. உகர ஈறு
அதுமுன் அன்று வருதல்
272. அன்றது முன்வரி னாவா கலும்ஐ
வரினுக ரங்கெடு தலுமாந்
தூக்கின்.
(இ-ள்.) செய்யுளில்
அதுவென்னுஞ் சுட்டுப்பெயருக்கு முன் அன்றென்னும்
குறிப்பெச்சவினைவரின் ஆவாதலும், ஐ வரின் உகரங்
கெடுதலுமாம்.
(வ-று.) அது + அன்று = அதான்று;
அது + ஐ =அதை எனவரும்.
(வி-ரை.)
‘‘அன்றுவரு காலை ஆவா
குதலும்
ஐவரு காலை மெய்வரைந்து
கெடுதலும்
செய்யுள் மருங்கின்
உரித்தென மொழிப’’ (உயிர்ம-56)
என்பது தொல்காப்பியம்.
(113)
செரு, எரு என்னும்
பெயர்கள்
273. செருவு மெருவு மம்மொடு
சிவணும்.
(இ-ள்.) செருவென்னும்
பெயரும், எருவென்னும் பெயரும், அம்முச்சாரியை
பெறும்.
(வ-று.) செருவங்களம்,
எருவங்குழி. (114)
செரு என்பதற்குச் சிறப்பு
விதி
274. அம்மிறு மகரஞ்
செருவயி னழியும்.
(இ-ள்.) முற்கூறியவற்றுள்
அம்முச்சாரியை இறுதி மகரமெய் செருவிற் கெடும்.
(வ-று.) செருவக்களம். (115)
|