எழுத்ததிகாரம்83முத்துவீரியம்

(இ-ள்.) ஆசைப்பெருக்கத்தை யுணர்த்து மவாவென்னுஞ் சொல்வரின் வேட்கையென்னு
மொழியிறுதி ஐகார வுயிரும், ககர வொற்றுங்கெட்டு நடுநின்ற டகரமெய் ணகரவொற்றாகத்
திரியும்.

(வ-று.) வேட்கை + அவா = வேணவா.

(வி-ரை.) வேட்கை . பொருள்கள் மேல் தோன்றும் பற்றுள்ளம். அவா - அவற்றைப்
பெறவேண்டுமென மேன்மேல் நிகழும் ஆசை.

(தொல் - எழுத்து - 288 - நச்சர் உரை.) (134)

ஒழியிசை ஓகாரமும் மாறுகொள் எச்சமும்

294. ஒழியிசை யோவு மாறுகொ ளெச்சமு
     மிகாதியல் பாகு மென்மனார் புலவர்.

(இ-ள்.) ஒழியிசையைத் தரும் ஓகாரமும், மாறுகொளெச்சமும் மிகாதியல்பாகும்.

(வ-று.) புற்றோ புதலோ. (135)

கோ என்பதன் முன் இல் வருதல்

295. இல்லொடு கிளப்பி னியல்பா கும்மே.

(இ-ள்.) ஓ, இல்லென்னும் பெயரோடு புணரின் இயல்பாகும்.

(வ-று.) கோவில்.

(வி-ரை.)

‘‘இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும்’ (உயிர் - 61)

என்பது தொல்காப்பியம். (136)

10. ஒளகார ஈறு

ஒளகார ஈற்றுச்சொல்

296. ஒளகார விறுதி மிகுதலும் உகரச்
     சாரியை பெறுதலுந் தனக்குரித் தாகும்.

(இ-ள்.) ஒளகார வீற்றுச்சொன் மிகுதலும், உகரச் சாரியை பெறுதலுமாம்.

(வ-று.) கௌவுக்கடிது. (137)