எழுத்ததிகாரம்88முத்துவீரியம்

(வ-று.) மரம் + குறிது = மரங்குறிது. (156)

அகம் முனர்ச் செவி கை வருதல்

316. அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும்.1

(இ-ள்.) அகமென்னுஞ் சொற்குமுன், செவி, கை, என்னுஞ் சினைப் பெயர் வரின்,
நடுநின்ற ககரவொற்றும், அகரவுயிருங் கெடும்.

(வ-று.) அகம் + செவி = அஞ்செவி. அகம் + கை = அங்கை. எனவரும். (157)

இலம் முன் படு வருதல்

317. இலமுன் படுவரி னியல்பா கும்மே.

(இ-ள்.) இலமென்னுஞ் சொற்குமுன்னர்ப் படுவென்னுஞ் சொல்வரி னியல்பாம்.

(வ-று.) ‘இலம்படு புலவர்.’ (மலைபடு - 576) (158)

எண்ணுப் பெயர்

318. எண்வரின் ஆயிரம் அத்தொடு சிவணும்.

(இ-ள்.) ஆயிரமென்னும் எண்முன், எண்ணுப்பெயர்கள் வரின் அத்துச்சாரியை பெறும்.

(வ-று.) ஆயிரத்தொன்று, ஆயிரத்திரண்டு, ஆயிரத்தைந்து. (159)

இதுவுமது

319. அளபொடு நிறையும் வரின்மிகு மென்ப.

(இ-ள்.) ஆயிரமென்னும் எண்முன், அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வரின்
மிக்குமுடியும்.

(வ-று.) ஆயிரக்கலம், ஆயிரக்கழஞ்சு. (160)

ஈம், கம், உரும்

320. ஈம், கம், உரும் உக ரத்தொடு நிலையும்.

1. நன் - எழுத்- மெய்யீற் - 19.