| எழுத்ததிகாரம் | 92 | முத்துவீரியம் |  
  
(வி-ரை.) தேன் + இறால் =
தேத்திறால் ஈறு அழிந்து இரண்டு தகரவொற்றுப்பெற்றுத் 
தேத்திறால் என ஆயிற்று. தகரஒற்று இரட்டுதலைத் தொல்காப்பிய
உரையாசிரியர்கள் 
மிகையினால் கொள்வர். (தொல் - புள்ளி - 49) (173) 
மின் பின் பன் கன் 
333. மின்பின் பன்கன்
றொழிற் பெயரனைய 
     கன்னவ் வேற்று
மென்மையோ டுறழும்.1 
(இ-ள்.) மின்னும் பின்னும்
பன்னும் கன்னும் உகரச்சாரியை பெறும், அவற்றுட் கன் 
அகரச்சாரியை பெற்று மெல்லெழுத் துறழ்ந்து
முடியும். 
(வ-று.) மின்னுக்கடிது,
பின்னுக்கடிது, பன்னுக்கடிது, கன்னுக் கடிது, கன்னத்தட்டு, 
கன்னந்தட்டு எனவரும். 
(வி-ரை.) மின் என்பது
மின்னுதல் தொழிலையும், பின் என்பது பின்னுதல் 
தொழிலையும், பின்னிய கூந்தலையும், பன் என்பது
சொல்லுதலையும், சொல்லையும், கன் 
என்பது கன்னார்
தொழிலையும், கன்னாரையும் குறிக்கும். (தொல் -
எழுத் - புள்ளி - 50 
-விளக்கவுரை.) (174) 
பொதுப்பெயர் முன் தந்தை
வருதல் 
334. தந்தை வரிற்பொதுப் பெயர்மொழி யிறுதியும் 
     வருமொழி யாதியு மடியு
மென்ப. 
(இ-ள்.) தந்தையென்னு
முறைப்பெயர் வரின், பொதுப்பெயர் ஈறும் வருமொழி 
முதலுங்கெடும். 
(வ-று.) சாத்தன் + தந்தை =
சாத்தந்தை எனவரும். 
(வி-ரை.) 
‘இயற்பெயர் முன்னர்த்
தந்தை முறைவரின் 
முதற்கண் மெய்கெட அகரம் நிலையும் 
மெய்யொழித் தன்கெடும்
அவ்வியற் பெயரே’ 
என்பது தொல்காப்பியம்.
இதனினும் இவ்வாசிரியர் கூறியுள்ள விதி
எளிமையாயுள்ளது. (175) 
ஆதன், பூதன்
என்பவற்றின் முன் தந்தை வருதல் 
335. ஆதனும் பூதனு மவ்வியல்
பாதலும் 
     அவற்றொடு தகர மாவியுங்
கெடுதலும் 
     எனவிரு விதிகளு மேற்கு மென்ப. 
1. நன் - எழுத் - மெய்யீற்
- 14. 
			
				
				 |