எழுத்ததிகாரம் | 94 | முத்துவீரியம் |
(வ-று.) தான் + கை = தன்கை;
யான் + கை = என்கை எனவரும். (180)
இதுவுமது
340. குறுகலுந் திரிதலும்
அல்வழிக் கிலவே.
(இ-ள்.) அல்வழிக்கண்
மேற்கூறிய விரண்டு பெயரும் நெடுமுதல் குறுகலும் என்னாகத்
திரிதலுமிலவாம்.
(வ-று.) யான்குறியேன்,
தான்பெரியன். (181)
முன்றில்
341. முன்னொடு சிவணின்
முதலிலோர் றவ்வுறும்.
(இ-ள்.) முன்னொடுபுணரின்,
இன்முதலிலொரு றரகவொற்றுத் தோன்றும்.
(வ-று.) முன் + இல் =
முன்றில். (182)
பொன்
342. பொருளெனப்
பெயர்பெறும் பொன்னிறு கெடவொரு
லகார மகாரமுந் தோன்று
மென்ப.
(இ-ள்.) பொருளென்று
பெயர்பெற்ற பொன்னிறுதி கெட ஒரு லகரவொற்றும்
மகரமெய்யுந் தோன்றும்.
(வ-று.) பொன் + படை =
பொலம்படைப் பொலிந்த. (மலைபடு - 574)
(வி-ரை.) லகாரம் மகாரம்
எனப் பொது வகையாற் கூறினாரேனும் லகாரத்தை உயிர்
மெய்யாகவும், மகாரத்தை ஒற்றாகவும்
கொள்க. உரையில் லகரவொற்று எனக் குறித்திருப்பது
பொருத்தம் இல்லை. (183)
6. யகர ஈறு
343. வேற்றுமை யல்வழி
யகரவீ றியல்பே.
(இ-ள்.) அல்வழிக்கண்
யகரமெய்யிறுதியாகிய சொற்களுக்கு முன் வருகிற க,
ச, த,
ப க்கள் மிகாதியல்பாகும்.
(வ-று.) நாய்குறிது,
நாய்சிறிது, நாய்தீது, நாய்பெரிது. (184)
|