எழுத்ததிகாரம் | 97 | முத்துவீரியம் |
லகர ஈற்றின்முன்
மென்கணம் வருதல்
351. 1 மெல்லெழுத் தியையி
னகர மாகும்.
(இ-ள்.)
மெல்லெழுத்துக்களோடு புணரின், னகர மெய்யாகத்
திரியுமென்க.
(வ-று) கன்ஞெரி, கன்முரி.
(192)
நெட்டெழுத்தின்
முன்வரும் லகரம்
352. நெட்டெழுத் திம்ப
ரியல்பா கும்மே.
(இ-ள்.) நெட்டெழுத்துக்கு
முன்னின்ற லகரமெய் மிகா தியல்பாகுமென்க.
(வ-று.) பால்கடிது. (193)
லகரத்தின்முன் தகரம்
353. தகரம் வரும்வழி
தனிநிலை யாகும்.
(இ-ள்.) அல்வழிக்கண்,
தகரமெய் முதன்மொழியாக வரின் றகரமாதலே யன்றி
ஆய்தமாகவுந் திரியுமென்க.
(வ-று.) கற்றீது - கஃறீது.
(194)
அல்வழி முடிபு
354. அல்வழி யெல்லாம்
உறழு மென்ப.
(இ-ள்.) அல்வழிக்க
ணெல்லாத்திரிபும் வல்லெழுத்துக்களோ டுறழ்ந்து
முடியும்.
(வ-று.) கல் + குறிது =
கற்குறிது, வில் + குறிது = விற்குறிது. (195)
நெல், செல், கொல்,
சொல்
355. நெல்லுஞ் செல்லுங்
கொல்லுஞ் சொல்லும்
அல்வழி யானும் றகர
மாகும்.2
1. தொல் - புள்ளி - 72.
2. நன் - எழுத் - மெய்யீற்
- 29.
|