| 19. | கோஎனும் எழுத்தின் மூன்றாம் குறியின் |
| | ஈற்று வரையைக் குறைத்து, திற் கூகரத்து |
| | ஈறுஉறப் பொருத்தி, மேல்வரை பொருந்தா |
| | வண்ணம்மேல் நீட்டல் ஙகரம் ஆகும்; |
| | அந்நிலை வரைஇடம் கிக்கீ அணிபிறை |
| | மருவிடில் ஙிகர ஙீகாரம் விளங்கும்; |
| | அவ்வரை அடிதொட்டு அகர ஆகாரத்து |
| | ஈறு கூட்டில் ஙுங்ஙூ இயங்கும்; |
| | ஙாவொடு ஙெங்ஙே ஆதிய பிறவும் |
| | காவொடு கெக்கே ஆதிய போல்வ; |
| | அடிநா உள்நாத் தொடும்ஒலி யினவே. |