எழுத்திலக்கணம் 036
“டகர ணகாரம் நுனிநா அண்ணம்”1 என்ற கருத்தே இது. ஆனால் நுனி அண்ணத்தைத் தொட்ட நாவின் நுனி அதை நீங்கிக் கீழே வந்த பிறகுதான் ஒலி பிறக்கிறது. இதனை உச்சரித்துப் பார்த்துக் கொள்ளலாம். இந்த நுட்பம் தெளிவாக இந்நூற்பாவுள் குறிக்கப்பட்டுள்ளது.
(22)
ணகர வருக்கம்
23.குறுகிய இரட்டைக் கொம்புஈறு எகரம்
 பொருந்த ணகரம் பொலிதரும்; ஞகரம்
 புணர்ந்துஅவ் வொருமுச் சுழியையும் முறையிற்
 சுற்றி நடுச்சுழி மேல்வர ணாஆம்:
 ஞிஞ்ஞீ மேற்குறி ணவ்வொடு அம்முறையில்
 சேர்தர ணிண்ணீ திகழ்தரும்; ணுண்ணூ
 ணெண்ணே ணௌஎனும் எழுத்தினம் ஞுஞ்ஞூ
 ஞெஞ்ஞே ஞௌஎனல் போலும் நிலையின;
 உகரத்து அடியினைச் சிறிதுமேல் வலம்கொணர்ந்து
 அதனொடு ணகரம் பொருத்த ணைஆம்;
 ணொண்ணோ இரண்டும் கொம்புஇயல் வழாஅ
 இருகுறி உடைத்தாய்ப் பிற்குறி ணாவாக்
 கிடக்கும்;இப் பகுதியில் கிளர்தொனி எழுங்கால்
 நுனிநா அடிப்புறம் அண்ணாத் தொட்டுத்
 தடவும் என்று உரைப்பது தக்கோர் மரபே.
நெருக்கி எழுதப்பட்ட இரட்டைக்கொம்பின்(¬) இறுதியில் எகரம் இணைந்தால் ணகரம் ஆகும். (இரட்டைக்கொம்பின் ஈற்றில்) ஞகரம் சேர்த்து அதனால் உண்டான மூன்று சுழிகளையும் வலமாகக் சுற்றி இடைச் சுழியின் மேல் வரை வரைந்தால் ணா தோன்றும். ஞி, ஞீ என்பனவற்றின் மேற் பிறைகள் அவ்வாறே கூடின் முறையே ணி, ணீ உண்டாகும். ணு, ணூ, ணெ, ணே, ணௌ என்பவை முறையே ஞு, ஞூ, ஞெ, ஞே, ஞௌ போன்றவையேயாம். உகரத்தின் கீழ்ப்பகுதியைக் கொஞ்சம் வலப்புறமாக மேலேற்றி அதனுடன்