எழுத்திலக்கணம¢048
முற்பாதி வடிவத்தை மட்டும் உடைய ஒற்றைக் கொம்புடன் (ª) எகர வடிவம் இணைந்தால் னகரம் தோன்றும். இவ்வருக்கத்தின் மற்ற உயிர்மெய்கள் பதினொன்றும் னகர உயிர்மெய்க் குறிகளையே பெறும் நா நுனி அண்ணத்தைப் பொருந்துவதால் னகர ஒலி தோன்றும் என்றவாறு.
இவ்வீற்று னகரம் தமிழ்மொழி ஒன்றைத் தவிர வேறு எம்மொழியிலும் இல்லை. இதனைக்காட்டவே முன்நா அண்ணா முட்ட னகரம் பிறக்கும் எனக் கூறாமல் தமிழில் உள்ள னகரத்தை உச்சரித்தால் முன்நா அண்ணா முட்டும் என்று மாற்றிக் கூறினார்.
இனித் தொடர்ந்து நிறுத்த முறையானே அலகெழுத்து கூறப்படும்.
(35)
5.அலகெழுத்துகள்
36.உயிர்மெய் எழுத்தும் உரைக்குமாறு உரைத்தனம்;
 அலகினைக் கீழ்என நடுஎன மேல்என
 அளவுஎனப் பிரித்துஅவ் வாறே அவற்றின்
 உருவுடன் ஒலியும் உரைக்குதும் முறையே.
உயிர்மெய்யெழுத்துகளை எந்த அளவு உரைக்க இயலுமோ அந்த அளவு கூறினோம். இனி நிறுத்த முறையானே அலகெழுத்துகளைக் கீழ், நடு, மேல், அளவு என நான்கு பகுப்பாக்கி அம்முறைமையிலேயே அவற்றின் வரிவடிவத்தோடு பெயரையும் கூறுவாம் என்றவாறு.
நூற்பா ‘ஒலி’ என்றே குறிப்பினும் அலகுக்குறியீடுகள் ஓலிக்குறியீடுகளாக அன்றிச் சொற்குறியீடுகளாகவே இருத்தலின் உரையில் பெயர் என்று கூறப்பட்டது. கீழ் முந்திரி (1/102400) முதல் முந்திரி (1/320) வரை உள்ள பின்னங்கள் கீழ் அலகு என்றும் முந்திரி முதல் ஒன்றுவரை உள்ள பின்னங்கள் நடு அலகு என்றும், ஒன்றிற்கு மேற்பட்ட முழு எண்கள் மேல் அலகு என்றும், முகத்தலளவை பற்றிய எண் வடிவங்கள் அளவலகு என்றும் பிரித்துக் கொள்ளப்பட்டன.