எழுத்திலக்கணம்066
வடிவங்கள் வேறுபடும். இத்தகைய வேறுபாடுகளை எல்லாம் அநுபவத்தால்தான் அறிந்து கொள்ள முடியும்.
(56)
57.மற்றொரு கலைஎன மாறுபடும் எழுத்தை
 வைத்தவன் உள்ளக் குறிப்புஎனல் வழக்கே.
இது தமிழ் எழுத்துத்தானோ அல்லது வேறுமொழியோ என்று மயங்கும்படி ஓர் எழுத்து இருந்தால் அதை எழுதியவனுடைய உள்ளக்குறிப்பு என்று கொள்வதே மரபாகும் என்றவாறு.
மற்றவர்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் மறைமொழியாக எழுதப்படும் வரிவடிவம் பற்றியது இந்நூற்பா. இத்தகைய சங்கேதக் குறியீடுகளை அவற்றை எழுதினவனே அறிவான்; மற்றையர் அறியார். எனவே இது அவன் உள்ளக்குறிப்பு ஆயிற்று.
(57)
58.கலைமுதல் எழுத்தே ஆம்எனல் காணும்
 சீரியர் மகிழ்வான் தெரிந்த வண்ணம்
 உருவுடன் ஒலியும் உரைத்தனம்; அவற்றின்
 நிலையிவண் ஆம்என நிகழ்த்துதும் நினைத்தே.
மொழிக்கு அடிப்படையாக உள்ளவை எழுத்துகளே என உணர்ந்துள்ள சான்றோர்கள் உவகை கொள்வதற்காக எமக்குத்தெரிந்த அளவு அவற்றின் வரிவடிவங்களையும் ஒலிகளையும் கூறினாம். இனித் தொடர்ந்து அவ்வெழுத்துகளின் ஒலி நிலை, இயங்குநிலை, இனநிலை போன்றவை இவ்வாறாகும் என்று ஆராய்ந்து கூறுவாம் என்றவாறு.
இந்நூற்பாவால் எழுத்திலக்கணத்தின் முதல் இயல்பாகிய உருவோசை இயல்பு நிறைவு செய்யப்பட்டு இரண்டாவதாகிய நிலை இயல்பிற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்பட்டது.
(58)
உருவோசை இயல்பு முற்றிற்று