கூட்டினால் (கூட்டெழுத்து, அளபெடை போன்ற) மற்ற எழுத்துகளுக்குரிய மாத்திரை புலப்படும் என்றவாறு. |
மெய்மேல் உயிர் ஏறிய உயிர்மெய் அவ்வுயிரின் மாத்திரையைப் பெறுகிறது. ஓர் இனமெய்யுடன் அதே இன உயிர்மெய் சேர்ந்த க்க, ய்ய, ன்ன போன்றவை எவ்வாறு அலகிடப்பட வேண்டும் என்பதனையும், உயிர், ஒற்று அளபெடைகளின் மாத்திரை அளவுகளையும் இந்நூற்பா கூறுகிறது. க்க போன்றவை 1 1/2 மாத்திரை; ஈஇ போன்றவை 3 மாத்திரை; இலங்ங்கு போன்ற மெய்யளபெடை 1 மாத்திரை என்று கொள்க. |
யாப்பில் பல இடங்களில் ஒற்றுக்கள் அலகிடப்படாததால் க்க போன்ற புணர்எழுத்துகளின் மாத்திரை உரைக்க வேண்டுவதேனோவெனில், சீர் தளை பற்றி வராமல் மாத்திரை பற்றி வரும் விருத்தங்களும் தமிழில் பெருமளவில் வழங்கி வருவதால் கூற வேண்டுமென்க. ரட்டையாசிரிய விருத்தம் இதற்கு உதாரணமாம். (63) |
64. | ஒலிநிலை அளவாம் மாத்திரை உரைத்தனம்; | | இயங்கும் நிலைசிறிது இயம்புதும் அன்றே. |
|
எழுத்துகளின் ஒலி அளவைக் கூறினோம். இனி அவற்றின் இயக்கத்தைச் சற்றே கூறுவாம் என்றபடி. |
இந்நூற்பாவால் ஒலிநிலையை முற்றுவித்து அடுத்த இயங்குநிலைக்குத் தோற்றுவாய் செய்து கொள்கிறார். (64) |
2. இயங்கு நிலை |
65. | வாய்திற என்கைக்கு ஆஎன்று உலகோர் | | பகர்வதுஉற்று உணரில் பல்வகை எழுத்தும் | | அதனால் தோன்றல்என்று அறிதல்மிக்கு எளிதாம் | | அன்றியும் உலகத்து அனைத்து எழுத்தினுக்கும் | | அகரம் முதல்என்று அறைந்ததுஎம் மறையே. |
|
உலகத்தில் பலரும் “வாயைத்திற” என்னும் பொருளில் “ஆஎனச்சொல் எனக் கூறுவதை நோக்கினால் எழுத்துகள் |