| | 68. | அகரமும் உகரமும் ஒஎன்று ஆமே. |  |  |  | 
 | 
	| அகரம் உகரம் ஆகிய ஈரெழுத்துகளும் கூடினால் ஒகரத்தைப் போன்று ஒலிக்கும் என்றவாறு. | 
	| முன்நூற்பாவில் எகரமே எனத்தெளிவாகக் கூறிய ஆசிரியர். இங்கே ‘ஒஎன்றுஆகும்’ என வேறுவாய்பட்டால் கூறுகிறார். முன்நூற்பா உரையிலேயே இவ்விணைப்புப் பற்றிய கருத்துகளும் கூறப்பட்டன. | 
| தமிழ் ஒகரம் அகரஉகரக் கலப்பாகும் என்பதும் ஆய்வுக்குரியதே. (68) | 
| | 69. | பதினோ ராவதுஒற்று அகரத்து ஒன்றி |  |  | ஐகாரம் ஆகும்என்று அறிதல்மிக்கு எளிதே. | 
 | 
	| யகரமெய் அகரத்துடன் சேர்ந்து ஐகாரம் ஆகும் என்பதை மிக எளிதில் யாரும் உணர்ந்து கொள்ளலாம் என்றவாறு. | 
| அய்யம்-ஐயம், அய்வனம்-ஐவனம் எனவரும். (69) | 
| | 70. | அகரத்து ஈர்ஏ ழாவதுஒற்று ஒன்றி |  |  | ஒளகாரம் ஆதல் அறிவுளார் அறிந்தும் |  |  | அப்பொறிக் குறியில் பதினா றாவது ஒற்று |  |  | ஏதோ நிமித்தத்து இசைத்ததுஒர் வியனே. | 
 | 
	| அகரத்தோடு வகரமெய் கூடி ஒளகாரம் தோன்றுவதைப் புலவர் உணர்ந்திருந்தும், ஒளகாரத்தின் வரிவடிவில் எக்காரணம் பற்றியோ ளகரத்தைச் சேர்த்தது ஒரு விந்தையான செயல் ஆகும் என்றவாறு. | 
	| அவ்வை-ஒளவை, வவ்வல்-வௌவல் என வரும், ஒள காரத்தின் வரிவடிவில் ளகர வடிவம் ஏனோ சேர்ந்தது என்கிறார். எழுத்துகளின் வரிவடிவத்திற்கும் ஒலிவடிவத்திற்கும் ஏதாவது ஒப்புமை காண விழையும் இவர் போக்கு 66 ஆம் நூற்பாவிலுங் கண்டோம். அடுத்த நூற்பாவிலும் இது புலப்படும். (70) |