71. | ஒளகா ரத்தின் கடைக்குறி பற்றி | | ஊகாரம் அதனூடு உற்றது என்பார். | | அம்முறை என்நூற்கு ஆகாது அன்றே. |
|
ஒளகார வரிவடிவின் ஈற்றில் ஊகாரத்தில் உள்ள ளகர வடிவம் இடம் பெற்றிருப்பதால் ஒளகாரத்தில் ஊகாரம் இணைந்துள்ளது என்று சிலர் சொல்வர். அக்கொள்கை என்னால் செய்யப்படும் இந்த இலக்கணத்திற்கு ஏற்புடையது அல்ல என்றவாறு, அன்றே-அசைநிலை. |
ஒளகாரத்தில் ஊகாரம் இருப்பதாக நூல் செய்தவர் யார் என விளங்கவில்லை. ஒளகாரத்தை ஒன்றரை மாத்திரையுடைய நடுவுயிராகக் கொள்ளுமிந்நூல் அதற்குள் இரண்டு மாத்திரையுள்ள நெடில் உள்ளது என்றால் மறுக்க வேண்டியது இயல்பே. (71) |
72. | ஆய்தமோடு ஒற்றும் பிணமே போல்வன | | ஆதலின் இயக்கம் அறைந்திலம் ஆயினும் | | அகரச் சார்பே ஆம்எனில் தகுமே. |
|
ஆய்தமும் மெய்யும் உயிரற்றவை ஆகும். எனவே அவற்றின் இயக்கத்தைத் தனியே கூறவில்லை. என்றாலும் அவை அகரச்சார்பு உடையன எனக் கொள்ளலாம் என்றவாறு. |
65 ஆம் நூற்பாக்கருத்தோடு தொடர்புடையது இது. (72) |
73. | அகரம் பதினெட்டு ஒற்றினும் அணைந்து | | க, ங, ச, ஞ, ட, ண, முதற் பிறவும் ஆமே. |
|
க் முதல் ன் வரையான பதினெட்டு மெய்களின் மீதும் அகரம் ஊர்ந்து முறையே ககர முதல் னகரமீறாகிய உயிர்மெய்களாகும் என்றவாறு. (73) |
74. | ஆஎழுத்து ஒற்றினத்து அணையும் காலை | | கா, ஙா, சா, ஞா ஆதிய கவினுமே. | | க் முதல் ன் வரையான ஒற்றெழுத்துகளின் மீது ஆகாரம் |
|