அறுவகையிலக்கணம்075
ஊர்ந்து முறையே கா முதல் னா ஈறாகிய பதினெட்டு உயிர் மெய் தோன்றும் என்றவாறு.
(74)
75.இகரம் ஒற்றினத்து இசையும் ஆயின்
 கிகர ஙிகரம் ஆதிய கிளருமே.
க் முதல் ன் வரையான பதினெட்டு மெய்களின் மேல் இகரம் ஊர்ந்து முறையே கி முதல் னி ஈறாகிய உயிர்மெய் தோன்றும் என்றவாறு.
(75)
76.ஈகாரம் ஒற்றுத் தொறும்போய் இசைதலின்
 கீ, ஙீ தொட்டு னீவரை வருமே.
க் முதல் ன் வரையான மெய்களின் மேல் ஈகாரம் ஊர்வதால் முறையே கீ முதல் னீ ஈறாகிய பதினெட்டு உயிர்மெய்யும் தோன்றும் என்றவாறு.
(76)
77.உகரம் ஒற்றுஇனத்து உறுமேல் குகரம்
 ஙுகரம் ஆதி னுவ்வரை ஒளிருமே.
க் முதல் ன் வரையான பதினெட்டு மெய்களின் மேல் உகரம் ஊர்ந்தால் முறையே குகரம் முதல் னுகரம் ஈறாகிய உயிர்மெய் தோன்றும் என்றவாறு.
(77)
78.ஊ, ஒற்று இனத்துஉறின் கூஙூ ஆதி
 னூ வரை வரும்என நுவல்வது முறையே.
க் முதல் ன் வரையான பதினெட்டு மெய்களின் மேல் ஊகாரம் ஊர்ந்தால் முறையே கூ முதல் னூ வரையான உயிர்மெய் தோன்றும் என்றவாறு.
(78)
79.எகரப் பொறிஒற்று இனத்துஉறில் கெகர
 ஙெகரம் ஆதி னெவ்வரை நிகழுமே.
க் முதல் ன் வரையான பதினெட்டு மெய்களின் மேல் எகரம் ஊர்ந்தால் முறையே கெ முதல் னெ வரையான உயிர் மெய் தோன்றும் என்றவாறு.
(79)