எழுத்திலக்கணம்076
80.ஏ, ஒற் றிடையுறில் கேஙே தொட்டு
 னேவரை வரும்என நிகழ்த்திடல் முறையே.
ஏகாரஉயுர் க் முதலிய பதினெட்டு மெய்களோடும் சேர்ந்தால் முறையே கே முதல் னே வரையான உயிர்மெய் தோன்றும் என்றவாறு.
(80)
81.ஒற்றோடு ஐயெழுத்து உறுமேல் கைமுதல்
 ஆகி, னை ஈறாம் அறுமூன்று அவிருமே.
ஐகான் க் முதலிய பதினெட்டு மெய்களோடும் கூடினால் முறையே கை முதல் னை வரையான உயிர்மெய் தோன்றும் என்றவாறு.
(81)
82.ஒற்றுத் தொறும்போய் ஒகரம் புகலால்
 கொகர ஙொகரம் ஆதிய குலவுமே.
ஒகரம் பதினெட்டு மெய்களோடும் கூடினால் முறையே கொ முதல் னொ வரையான உயிர்மெய் தோன்றும் என்றவாறு.
(82)
83.மெய்களில் ஓஉறில் கோ, ஙோ ஆதிய
 பொறிமூ வாறும் பொலியும் அன்றே.
ஓகாரம் மெய்களோடு கூடினால் முறையே கோ முதல் னோ ஈறான பதினெட்டு உயிர்மெய்யும் தோன்றும் என்றவாறு,
(83)
84.ஒளஎனும் உயிர்தான் அறுமூன்று உடல்கொடு
 கௌவ்வே முதலா னௌவ்வரை காட்டுமே.
ஒளகார உயிர் பதினெட்டு மெய்களொடும் பொருந்தினால் முறையே கௌ முதல் னௌ ஈறாகிய உயிர்மெய் தோன்றும் என்றவாறு.
(84)
85.மற்றைமூ வகைஎழுத்து ஒலிவரு மாறே
 இயக்கமும் ஆம்என்று இயம்பிடல் மரபே.