அஃகேனத்தில் சூரியன், சந்திரன், தீக்கடவுள் ஆகிய மூன்று சுடர்த் தெய்வங்களும் விளங்குவர் என்று கூறலாம் என்றவாறு. (98) |
|
99. | ஒற்றினந் தோறும் உருவொடு தோன்றாத் | | தெய்வம் புகும்எனம் செப்பிடல் முறையே. |
|
மெய்யெழுத்துகளில்எல்லாம் வடிவம்அற்ற அருவநிலையிலுள்ள தெய்வம் புகுந்து நிலைத்துள்ளது எனலாம் என்றவாறு. (99) |
100. | உயிர்மெய் ஆதியில் உரைக்கஅரும் பேதத்து | | அளவுஇல்பல் தெய்வம் அண்ணுறும் அன்றே. |
|
உயிர்மெய் முதலிய மற்றவகை எழுத்துகளுள் பிரித்துக் கூற முடியாதபடி கணக்கற்று விளங்குகின்ற பல தெய்வங்கள் பொருந்தி நிலைத்து வாழும் என்றவாறு. |
உயிர்மெய் ஆதி என்றது அலகு, கூட்டு, குறிப்பு எழுத்துகளை, (100) |
101. | தெய்வப் பெயரின் சிரத்துஉறும் எழுத்தே | | அவ்வக் கடவுள் அணிநிலை யாம்என்று | | இயம்பும் மாற்றமும் இனிதாம் அன்றே. |
|
தெய்வத்தின் இயற்பெயரின் முதல் எழுத்தே அக்கடவுள் நன்கு நிலைபெற்று ஒளிரும் எழுத்தாம் எனச் சொல்லப்படும் அந்நெறியும் கொள்ளத்தக்கதேயாம் என்றவாறு. |
இதுவும் மந்திர சாத்திரத்தைத் தழுவியதே. கணபதி, துர்க்கை, சண்முகர், சம்பு, காளி என்னும் தெய்வங்கட்கு மந்திர நூலார் முறையே கம், தும், ஷம், சம், கம் என்பனவற்றைப் பீஜமாகக் கொள்ளுதல் காண்க. (101) |
102. | தெய்வ நிலைஇவண் செப்பினம்; எழுத்தின் | | தன்மை நிலையினைச் சாற்றுதும் சற்றே. |
|