இப்பிரிவில் புணர்ச்சி விதிகளோடு ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம், முற்றியலுகரம், மகரக் குறுக்கம், வடமொழிச் சந்திகள் ஆகியனவும் கூறப்படுகின்றன. |
114. | சுட்டுஎழுத் திடைஎவ் வுயிர்வந்து ஒன்றினும் | | வகரஒற்று இடைக்கொடுஅவ் வுயிர்மெய் ஆகும்; | | அவ்வானை இவ்விரும்பு உவ்வெழுத்து எவ்வோலை | | என்னும்நான் மாற்றத்து இயல்பே விளங்கும். |
|
சுட்டெழுத்துகளோடு எந்த உயிரெழுத்து வந்து புணர்ந்தாலும் வகர மெய் இடையில் தோன்றுவதோடு உயிரும் வகரவர்க்க உயிர்மெய்யாகத் திரியும். அவ்வானை, இவ்விரும்பு, உவ்வெழுத்து, எவ்வோலை என்ற நான்காலும் இவ்விலக்கணம் தெளிவாக விளங்கும் என்றவாறு. |
முன் இவரால் “எகரம் முதல்நின்று பொதுப்படச் சுட்டி ஐயம் தீர்வான் வினவலாகும்”1 என வினாச் சுட்டாகக் கொள்ளப்பட்டதால் இங்கும் எகரம் சுட்டுப் பெயருடனேயே ஆளப்பட்டது. அ + ஆனை; இ + இரும்பு; உ + எழுத்து; எ + ஓலை என்பனவற்றுள் வகரமெய் தோன்றியதோடு ஆ, இ, எ, ஓ என்னும் உயிர்கள் முறையே வா, வி, வெ, வோ எனத் திரிந்தமை காண்க. |
இவ்வாசிரியரால் இயற்றப்பெற்ற “ஏழாமிலக்கணம்” என்ற நூலின் எட்டாவது நூற்பா இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. (114) |
115. | உயிர்மெய்ப் பொறிமுன் உறுமொழிச் சுட்டில் | | அவ்அவ் வருக்கத்து ஒற்றுஇடை தோன்றும்; | | அக்கோன் இந்நகர் எவ்வேல் எனவே. |
|
உயிர்மெய் எழுத்துகள் வந்து சுட்டெழுத்துகளோடு புணருங்கால் அவ்வுயிர்மெய்யின் வருக்கத்து மெய்எழுத்து இடையில் தோன்றும். அக்கோன், இந்நகர், எவ்வேல் என்பன உதாரணங்களாம் என்றவாறு. |
|