அகர இகர எகரச் சுட்டுகளுடன் ககர, நகர, வகர வருக்க உயிர்மெய்கள் புணர முறையே க், ந், வ் இடையில் தோன்றின. உரையிற் கோடலாக உப்பையன் போன்ற உகரச் சுட்டையும் கொள்க. | இங்கு ஏழாம் இலக்கணம் பத்தாம் நூற்பா காண்க. (115) | 116. | இருபால் விகுதிகள் சுட்டில் அகரம் | | ஒற்றுஇன்றி வகரமாய் அணைதலும் வாய்பாடு; | | அவன்இவள் எவர்எனல் உதாரணம் ஆமே. |
| ஆண்பால், பெண்பால், இவ்விரண்டிற்கும் பொதுவான பலர்பால் என்னும் இவற்றின் விகுதிகள் ஆகிய அன், அள், அர் என்பவை சுட்டெழுத்துகளுடன் புணர்வழி (உயிரெழுத்துப் புணர்ச்சியில் இடையில் தோன்றும்) மெய்யெழுத்து வராமல் அகரம் வகரமாகத் திரியும். அவன், இவள், எவர் என்ற மூன்றும் எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு. | இருபால் என்ற சொல்லை இரட்டுற மொழிதலாக்கிப் பலர்பாலும் உரைக்கப்பட்டது. இருபால்-ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டு என்பது ஒன்று; இருபால் விகுதி-இருபாலுக்கும் பொதுவான பலர்பால் விகுதி. உதாரணம் நோக்கின் இதன் இன்றியமையாமை விளங்கும். அ + அன் என்பதாகக் காண்க. (116) | 117. | ஆஊ ஓஎனும் எழுத்துஒரு மூன்றும் | | பின்வரும் உயிர்களை வகரஒற்று உட்புகச் | | செய்வன; உதாரணம் ஆவாளி எனலும், | | ஊவிட்டான் எனலும், ஓவென்றான் எனலுமே. |
| ஆ, ஊ, ஓ, ஆகிய மூன்று நெடில்களோடு உயிர்எழுத்துகள் சேர்ந்தால் வகர ஒற்று இடையே தோன்றும். ஆவாளி, ஊவிட்டான், ஒவென்றான் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு. |
|
|