“அம்முன் இகரம் யகரம் என்று இவை எய்தின் ஐஒத்து இசைக்கும்; அவ்வோடு உவ்வும் வவ்வும் ஒளவோரன்ன”1 என்றார் பவணந்தியாரும். (119) |
120. | ஒகரத் துடனஉயிர் மிகைபட ஒன்றா; | | ஒன்றினும் அகரத்து இயல்பே ஒளிர்தரும்; | | ஒவ்வெழுத்து எனும்சொல் உதாரணம் ஆமே. |
|
ஒகர உயிர் (அதிகமாக மொழியீற்றில் வருதலின்மையின்) பிற உயிர்களுடன் பெரும்பாலும் புணராது. அங்ஙனம் ஒரோ வழிப் புணரினும் அகரத்திற்குரிய இலக்கணத்தைப் பெற்று வரும். ஒவ்வெழுத்து என்பது இதற்கு எடுத்துக்காட்டாம் என்றவாறு. |
அகரத்தியல்பு முன், “வகரவொற்று இடைக்கொடு அவ்வுயிர் மெய் ஆகும்”2 என உரைக்கப்பட்டது. அவ்விதி பற்றி இங்கு ஒ + எழுத்து ஒவ்வெழுத்தாயிற்று. |
இவ்வியல்பின் முதல் ஏழு சூத்திரங்களான் நிலைமொழி ஈறு உயிராக இருக்கும் சிலவற்றின் புணர்ச்சிவிதிகள் கூறப்பட்டன. (120) |
121. | ஒருபொறிப் பின்னே உறும்ஆய்தம் தன்பின் | | வல்லுயிர் மெய்யே வருமாறு நிற்கும்; | | எஃகம், அஃது, கஃசுஎனல் உதாரணம். |
|
ஒரு சொல்லில் இரண்டாவது எழுத்தாக அஃகேனம் நிற்பின் அதனைஅடுத்து வல்லினத்தைச் சேர்ந்த உயிர்மெய் மட்டுமே (மூன்றாமெழுத்தாக) வரப்பெறும். எஃகம், அஃது கஃசு என்பன இதற்கு எடுத்துக்காட்டாம் என்றவாறு. |
“ஆய்தம் தானே குறியதன் கீழ்த்தாய் வலியதன் மேல் வந்து இயலும் என்ப”3 என்றபடி தனிமொழியில் எப்போதும் |
|