கொளலாம்; சிறியார் துணிந்தவன் செப்புதல் பிழையே” என்பவர் இவர்.1 (122) | 123. | ரழஒற்றுத் தம்உயிர் மெய்யே தழுவா; | | வந்திசேய் உளன்எனின் வரும்உதா ரணமே. |
| ரகர ழகர மெய்கள் இரண்டும் தம் வருக்க உயிர்மெய்களுடன் மயங்கா. மலடிக்கு மகன் இருக்கிறான் என்றால் இதற்கும் எடுத்துக் காட்டு உளதாகும் என்றவாறு. | இல்லாதவைகளைக் காட்டுதல் இயலாது என்பதை வேறு வாய்பாட்டாற் கூறினார். | இந்நூற்பாவில் இடம் பெற்ற ரகரம் பிறிதோரிடத்தில் இவரால் உலக வழக்கு நோக்கி, “அவற்றிடை ரகரம் சிறுபால்விர்ரென எறிந்தான், சர்ரெனச் சென்றது என வருமே”2 எனத் தழுவிக் கொள்ளப்பட்டுள்ளது. (123) | 124. | யரழஒற் றுக்கள் அவற்றின் பின்னர் | | ஒற்றும் சிற்சில புணர நிற்பன; | | மெய்ம்மறை, நிவிர்த்தி, புகழ்ச்சிமூன்று உதாரணம். |
| ய, ர, ழ ஆகிய மூன்று மெய்களும் தம்மை அடுத்தும் சில ஒற்றுகள் மயங்கி வருமாறு விளங்கும். மெய்ம்முறை, நிவிர்த்தி, புகழ்ச்சி ஆகிய மூன்று சொற்கள் இதற்கு எடுத்துக் காட்டாம் என்றவாறு. | சிற்சில ஒற்று என்புழி ஒரே சொல்லில் இரு மெய்கள் ய, ர, ழவின்பின் வரும் எனலாகாது. பதினெட்டு மெய்களுள் சிலவே புணர நிற்பன எனக் கோடல் வேண்டும். அவை க, ச, த, ப, ங, ஞ, ந, ம என்னும் எட்டு மெய்களே என்பதைத் தொல்காப்பியர், “யரழ என்னும் மூன்றுமுன் ஒற்றக் கசதபஙஞநம ஈரொற்று ஆகும்.”3 எனத் தெளிவாக்கியுள்ளார். (124) | |
|
|