129. | நகர ஒற்றுடன் அவ்வுயிர் மெய்யும் | | தகர உயிர்மெய்யும் சார்வதே தகுதி; | | எந்நா, கந்தன் எனும்இரண்டு உதாரணம். |
|
நகர மெய்யைத் தொடர்ந்து அதே உயிர்மெய்யும், தகர வருக்க உயிர்மெய்யும் மயங்கி வருவதே சிறப்பாகும். எந்நா, கந்தன் ஆகிய இரு சொற்களும் இதற்கு எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு. |
“ஞநமுன் தம்மினம் யகரமொ டாகும்”1 எனினும் பொருந் யாது போன்ற புணர்ச்சிகளை இவர் ஏற்காததால்-யகரத்தை அது சிறந்ததன்று என்பார்-ஏகாரம் கொடுத்துச் சார்வதே தகுதி என்றார். இது பற்றி முன்பே கூறப்பட்டது. இதனை இறந்தது விலக்கலாகக் கொள்க. (129) |
130. | மகர ஒற்றுடன் அதன்உயிர் மெய்யும், | | பகர வகர உயிர்மெய்யும் புணரும்; | | செம்மையும் கும்பனும் சேதம்வராது எனலும் | | உதாரணம் ஆம்என்று உணர்வது முறையே. |
|
மகர மெய்யைஅடுத்து ம, ப, வ ஆகிய மூவருக்கத்தைச் சேர்ந்த உயிர்மெய் எழுத்துகள் மயங்கப் பெறும். செம்மை, கும்பன், சேதம் வராது என்பன உதாரணங்களாம் என்றவாறு. |
இங்கும், “மம்முன் பயவ மயங்கும் என்ப”2 எனும் விதியில் இருந்து யகரம் விலக்கப்பட்டது. கலம்+யாது = கலம்யாது எனலன்றி இவர் கலமியாது என்றே வேண்டுவர். இவ்வாசிரியர் “யகரம் ஒழிந்த ஈற்றுஒற்று எதனொடும் யகரவுயிர் மெய்வரில் இகரம் இடை தோன்றும்”3 எனக் கொள்பவர். (130) |
131. | னகர உடலுடன் அவ்வுயிர் மெய்யும் | | கசபற ஞமவவ் வருக்கத் துயிர்மெயும் |
|
|