143. | மகர ஒற்றொடு தகரஉயிர் மெய்வந்து | | ஒன்ற நகர ஒற்றா மிளிர்தரும்; | | நந்தாய் எனும்சொல் நவில்உதா ரணமே. |
| நிலைமொழி ஈற்று மகர மெய்யுடன் தகர வருக்க உயிர் மெய் வருமொழி முதலாக வந்து புணர மகரம் நகரமாகத் திரியும். இதற்கு நந்தாய் என்பது உதாரணம் ஆம் என்றவாறு. | “மவ்வீறு ஒற்றுஒழிந்து உயிர்ஈறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்”1 என்றதனுள் இனமாய்த்திரிதல் இங்குக் காட்டப்பட்டது. நம் + தாய் என்ற புணர்ச்சியில் மகரம் தகரத்திற்கு இனமான நகரமாகத் திரிந்து நந்தாய் என நின்றமை காண்க. உறழ்ச்சி முடிபையும் இவ்வாசிரியர் ஏழாமிலக்கணத்துள், “மகரங் கசத வருங்கால் ஙஞந ஆகும்;,,,,,,,,,,,,,,, பிறவும் உள்ளன,,,,,,,,,,,,,,,,, நுகத்தடி எனவே2” எனக் குறிப்பிட்டுள்ளார். (143) | 144. | ணமனலள ஒற்றொரு ககரஉயிர் மெய்வரின் | | திரிதரும் வண்ணம் தெரிக்கும்; உதாரணம் | | மட்குடம், அங்கை, பொற்கோல், விற்கணை, | | முட்கூர் என்ன மொழிவது முறையே. |
| ண்,ம்,ன்,ல்,ள் ஆகிய நிலைமொழியீற்று மெய்முன் வருமொழி முதலாகிக் ககரவருக்க உயிர்மெய் புணர்ந்தால் அம்மெய்கள் திரியும், மட்குடம், அங்கை, பொற்கோல், விற்கணை, முட்கூர் என்பன இதற்கு உதாரணங்களாம் என்றவாறு. | | “ணனவல் வினம்வரட் டறவும் பிறவரின் இயல்பும் ஆகும், வேற்றுமைக்கு”3 “லளவேற் றுமையில் றடவும்”4 “மவ்வீறு,,,,,,,,,, வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்”5 ஆகிய விதிகள் இந்நூற்பாவில் ககரத்திற்குக் கூறப்பட்டன. (144) | |
|
|