அவர் விதிப்படி நெடில் அல்லது பல எழுத்துகளை அடுத்து வந்த ணகரமெய் நகரப்புணர்ச்சியில் வருமொழி முதலை ணகரமாக்கித் தான் கெட்டுவிடுகிறது, பாண் + நன்று பாணன்று; அமண் + நிலை = அமணிலை என வரும். தனிக் குறிலை அடுத்து வரும் ணகரம் தான் கெடாது நின்று வரும் நகரத்தையும் ணகரமாக்கும். இவ்விதிதான் இந்நூற்பாவில் கூறப்பட்டது. (146) |
147. | மகர ஒற்றுத் தன்னொடு ஞநவின் | | உயிர்மெய் தோன்றின் தான்இறந்து ஒழியும்; | | ஒவ்வோர் இடத்தே அவ்வவ் வொற்றாம். | | வருஞாயிறு எனலும், பொருநீர்மை எனலும் | | செஞ்ஞாயில் வெந்நரி என்பவும் உதாரணம். |
|
நிலைமொழி ஈற்று மகரமெய் வருமொழி ஞ, நக்களுடன் புணரும்போது கெட்டுவிடும். வருஞாயிறு, பொருநீர்மை என்பன இதற்கு உதாரணங்கள் ஆகும். சிற்சில இடங்களில் அம்மகரமெய் வருமொழி ஞ, நக்களாகத் திரியும். செஞ்ஞாயில், வெந்நரி என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு. |
நன்னூல், “நும், தம், எம், நம் ஈறாம் மவ்வரு ஞநவே”1 என இவ்விதியை மேற்கண்ட நான்கு சொற்களுக்கே உரியதாக்குகிறது. வீரசோழியம்தான் “ஞநமக்கள் பின்வரின் சாற்றும் ம போம்”2 என இதனைப் பொதுவாக்குகிறது. இவர் வீரசோழிய நெறியைக் கைக்கொண்டு இவ்வாறு கூறினார். எனினும் மரம் + ஞாயில் = மரஞாயில், வனம் + நரி = வனநரி எனவே வருதலால் ஒவ்வோர் இடம் என்றதைத் தனிக்குறிற்பின் வருமிடத்தை எனக் கொள்ளலாம். (147) |
148. | னகர மெய்யும் ணகரஒற்று அதுபோல் | | வரும்நகர உயிர்மெயைத் தன்னது ஆக்கும்; | | நின்னாய் எனும்சொல் நிகழ்த்துஉதா ரணமே. |
|
|